India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம், கோவை மாநகராட்சி இணைந்து கூடைப்பந்து மைதானத்தை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பில் புதுப்பிக்க முடிவு செய்து கடந்த மார்ச் மாதத்தில் பணியை துவங்கினர். மைதானம் முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டு நேற்று அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிக்காக திறக்கப்பட்டது. கூரையில் 50 எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மறைமலைநகர் அருகே திருக்கச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மகள் சாமினி என்ற 9 வயது குழந்தை விழிப்புணர்வு பதாகைகளுடன் சாலையில் 1 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் 9 வயது குழந்தையின் செயலுக்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.
2024–25ம் கல்வியாண்டிற்கான தமிழக முதல்வரின் திறனாய்வுத் தேர்வு ஜூலை 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. தேர்வு செய்யப்படும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000வழங்கப்படும்.
www.dge.tn.gov.in விண்ணப்பத்தினை ஜூன்11 முதல் 26 வரை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை ஜூன் 26ம் தேதி மாணவர் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது இந்த நிலையில் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், இன்று நள்ளிரவோடு தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுகின்றன.
மதுரையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 162 மாணவர்கள் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்காக அரசு நடத்திய நீட் (தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
2023ல் தகுதியான மாணவர்களின் எண்ணிக்கை 192 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மதுரையில் உள்ள பாதுகாப்புக் கிடங்கிற்கு நேற்று கொண்டு வரப்பட்டன. 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவுக்காக 2,751 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, 3,303 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,574ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது
மதுரை செல்லூர் தியாகி பாலு 2வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(66). இவர் நேற்று அயன்பாப்பாகுடியில் ஆரம்ப பள்ளி ஒன்றில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தபோது சாரத்திலிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோல் விருதுநகர் காந்தி நகரை சேர்ந்த ஆறுமுகம்(40). திருப்பாலையில் பள்ளி ஒன்றில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
மதுரை மாவட்டத்தில், வரும் சுதந்திர தின விழாவில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது 2024 வழங்கப்பட உள்ளது. விருது பெறுவதற்கு தகுதிகளையுடைய நபர்கள் தமிழக அரசின் என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து. விண்ணப்பங்களை வரும் 20.06.2024 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வெற்றிக் குறிவைத்து சொந்தத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் களம் கண்ட விஜய பிரபாகரனும், பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரும் தோல்வியைத் தழுவினர். மாணிக்கம் தாகூர் இதே தொகுதியில் 4 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இத்தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளது.
தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்
பொது மக்கள், அரசு அலுவலங்களில் கொடுக்கும் மனுக்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு வேலையை செய்வதற்கு, அரசு அலுவலர்கள் லஞ்சம் கேட்டாலும் அரசு அலுவலர்கள் அவர்களது பெயரிலோ அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ அபரிமிதமான மற்றும் வருமானத்திற்கு மீறிய சொத்துக்கள் இருந்தாலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்யலாம்.
Sorry, no posts matched your criteria.