Tamilnadu

News May 4, 2024

திருப்பூர்: புது மாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை

image

திருப்பூர் ராக்கியாபாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி (37), டிரைவர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோபிக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 4 மாதங்களாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த கோபி விஷம் தின்று நேற்று தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 4, 2024

நெல்லை: மத்திய சிறையில் கைதிகள் மோதல்

image

பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி சாஜி தரப்பை சேர்ந்தவர்களுக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே சிறையில் முன் விரோதம் இருந்துவருகிறது. நேற்று (மே. 3) மாலையில் அவர்கள் மோதிக்கொண்டனர். இதில் காயம் அடைந்த சாஜி, அருள், துளசி ஆகியோர் சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து துணை ஜெய்லர் முனியாண்டி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார்.

News May 4, 2024

காயலாங்கடை போல் காட்சி அளிக்கும் வாகனங்கள்

image

திருப்புவனம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார்கள் நிரம்பி காயலான் கடை போல் காட்சியளிக்கிறது. காவல் துறை கூறுகையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பாதுகாக்க முடியவில்லை மழையிலும், வெயிலிலும் வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கிடப்பதால் பழைய இரும்பு கடை போல காட்சியளிக்கிறது என்று கூறினார்கள் .

News May 4, 2024

ராம்நாட்டில் மனைவி கொலை: கணவன் தற்கொலை!

image

ராமநாதபுரம் தாயுமானசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கொத்தனார் பன்னீர்செல்வம் (41). இவரது மனைவி சரண்யா (38). கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் இன்று காலை தனது மனைவி சரண்யாவை கொலை செய்துவிட்டு கத்தியால் தனக்குத்தானே குத்தி தற்கொலை செய்துகொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 4, 2024

நாளை கடைகள் மூடல் – காரணம் இதுதான்!

image

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41வது வணிகர் தினம் , வணிகர் விடுதலை முழக்க மாநாடு மதுரை வளையங்குளம், நான்குவழிச்சாலையில் 5ம் தேதி (நாளை) நடக்கிறது. மாநாட்டு திடலை நேற்று பார்வையிட்ட மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிகர் தினத்தை முன்னிட்டு, நாளைய தினம் தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நேற்று தெரிவித்துள்ளார்.

News May 4, 2024

நெல்லை: 7441 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர்

image

மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவு தேர்வு நாளை (மே 5) நடைபெறுகிறது. இதற்காக நெல்லை மண்டலத்தில் 14 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 7441 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். அதிகபட்சமாக வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ் . பொறியியல் கல்லூரி மையத்தில் மட்டும் 960 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

News May 4, 2024

தேனியில் சவுக்கு சங்கர் கைது

image

தேனியில் யூ-ட்யூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். யூ டியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவைக்கு அழைத்து செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

மதுரைக்கு விரைவில் 346 புதிய பேருந்துகள்

image

அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாண் இயக்குனர் ஆறுமுகம், மதுரை கோட்டத்திற்கு 2022-23, 2023-24ம் ஆண்டுகளில் 350 பஸ்கள் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 137 புதிய பஸ்கள் இயங்கி வருகின்றன. காலாவதியான 85 பஸ்கள் கழிக்கப்பட்டன . மேலும் 213 பஸ்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மதுரை நகருக்கான 133 தாழ்தள பஸ்களும் தயாராகின்றன. பஸ்கள் படிப்படியாக கழிக்கப்படும்” என்று கூறினார்

News May 4, 2024

பேருந்துகளில் பழுது நீக்கப்பட்டு வருகிறது!

image

சென்னை அரசு போக்குவரத்து பேருந்துகளின் பழுதுபடுதல் குறித்து வெளியாகும் செய்திகளுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது. அதில், பழுதுகள், விபத்தில்லாத பேருந்து இயக்கத்தை இலக்காக கொண்டு செயல்படுகிறோம். கொரோனா காலத்தில் நிதி நெருக்கடி காரணமாக புதிய பேருந்துகளை வாங்க இயலவில்லை. தற்போது அனைத்து அரசு பேருந்துகளிலும் பழுதுகள் சரி செய்யப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

News May 4, 2024

ஆம்புலன்ஸ், சமூக ஆர்வலருக்கு பாராட்டு

image

ஊட்டியிலிருந்து கோத்தகிரி வழியாக வந்த சென்னை பெரம்பூரை சேர்ந்த சுற்றுலா வாகனம் குஞ்சப்பனை காட்சிமுனை அருகே பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் சிறுவர், சிறுமியர் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் பயணித்தனர். காயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்/ சமூக ஆர்வலர்கள் விரைந்து செயல்பட்டது அனைவரது பாராட்டுதலையும் பெற்றது.

error: Content is protected !!