India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல யூட்யூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அழைத்து வரும் வழியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் காவல் துறை வாகனம் மீது கார் மோதியது. இதில் காவலர்கள் மற்றும் சவுக்கு சங்கர் என அனைவருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று கூறினர்.
அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை(மே 5) நடைபெறுகிறது. அரியலூர் மான்போர்ட் பள்ளியில் 648 பேர், வெங்கட கிருஷ்ணாபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப்பள்ளியில் 552 பேர், தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 432 பேர், ரெட்டிப்பாளையம் ஆதித்ய பிர்லா பள்ளியில் 108 பேர், கருப்பூர் விநாயகா பொது பள்ளியில் 624 பேர் என மொத்தம் 2,364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
கரூர் மாவட்டத்தின் புகழூரில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் அமைந்துள்ளது புகழிமலை. இதை ஆரம்பத்தில் ஆறு கிராமங்களுக்குச் சொந்தமாக இருந்ததால் இதை ‘ஆறு நாட்டார் மலை’ என்றும் அழைப்பதுண்டு. 315 படிகட்டுகள் கொண்ட இம்மலையின் மீது முருகன் கோவில் உள்ளது. இங்கு வேலாயுதனாக காட்சித் தருகிறார். இங்கு மலைக்காவல் அய்யநாருக்கு தனிச் சன்னதி உள்ளது. இதற்கும் மேல் சிறிய குகையில் சிவன் பார்வதி சன்னதி உள்ளது.
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தோ்வு நாடு முழுவதும் வருகிற 5ம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் என்பிஆா் கல்விக் குழுமத்தில் 3 மையங்கள், பிஎஸ்என்ஏ கல்லூரி, பிரசித்தி வித்யோதயா பள்ளி, அனுகிரகா பள்ளி ஆகிய 6 மையங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறுகிறது. இந்த மையங்களில் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சோ்ந்த 3,400 மாணவா்கள் தோ்வு எழுதுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து வெயிலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு, குழந்தைகளுக்கு குழந்தைகள் வார்டில் 5 படுக்கை, மருத்துவமனை வளாகத்தில் 3 இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கோடைக்கால நீச்சல் வகுப்பு கடந்த 30ஆம் தேதி துவங்கியது. இந்த நீச்சல் வகுப்பு வரும் 12ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நீச்சல் வகுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் பேஸ்புக்கில் ஒரு விளம்பரத்தை பார்த்தார்.தனியார் நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.அதை நம்பி 13 லட்சத்து 15, 500 ஐ முதலீடு செய்தார்.முதலீடு செய்த பணத்திற்கு அதிக லாபம் கிடைக்காததால் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.கொடுக்க மறுக்கவே சைபர் கிராம் கிரைம் போலீசில் நேற்று புகார் அளித்துள்ளார்.போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இலுப்பூர் அருகே உள்ள குரும்பப்பட்டி கண்மாய் பகுதியில் பொதுஇடத்தில் சூதாட்டம் விளையாடுவதாக இலுப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் இன்று அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த குரும்பப்பட்டியை சேர்ந்த மகேந்திரன், மகேஸ்வரன்,நாகராஜ், சுப்பிரமணி ஆகிய 4 பேரை கைது செய்தனர்
திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த மே 1 ஆம் தேதி குருப்பெயர்ச்சி நடைபெற்றது. இரண்டாம் கட்ட லட்சார்ச்சனை மேலும் மே 6 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.. கட்டணம் ரூ 400. மேலும் விவரங்களுக்கு 04366-269407 என்கிற ஆலய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் சார்பில் இன்று மாலை 3 மணி அளவில் போராட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகிகள் கைது செயப்பட்டதால் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.