India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாலாஜா தாலுகா சுமைதாங்கி அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று காலை காவேரிப்பாக்கம் பெரிய கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை(58) கட்டடத்திற்கு தண்ணீர் ஊற்றுவதற்காக, அருகில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் அவரது உடலை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் KPK ஜெயக்குமார் சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் சடலமாக இன்று (மே 4) காலை மீட்கப்பட்டார். இது காங்கிரஸ் கட்சியினர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவரது உயிரிழப்பு குறித்து மூன்று தனிப்படை அமைத்து விசாரணை நடைபெறுவதாக திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
நாகூர் கடைத்தெருவில் ஜமால் முகமது என்பவர் ஹார்டுவேர் கடையும் இவரது கடைக்கு அருகே அப்துல்காதர் புத்தக கடையும் சேக்தாவூத் பேன்சி கடையும் வைத்துள்ளனர் நேற்று மதியம் மூன்று கடை உரிமையாளர்களும் தொழுகைக்கு சென்று பின் திரும்பி வந்தபோது மூன்று கடைகளின் கல்லா பெட்டிகள் உடைக்கப்பட்டு மொத்தமாக ரூ.18000 திருட்டு போய் உள்ளது. புகாரின் பேரில் நாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி, வீரபாண்டியில் அமைந்துள்ளது 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌமாரியம்மன் கோயில். முக்கியமாக கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்காக இங்கு பலரும் வழிபாடு செய்து வழக்கமாக இருந்து வருகிறது. சித்திரை, வைகாசியில் தேனியின் முக்கிய திருவிழாவாக இந்த கோயில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் போது 24 மணி நேரமும் கோயிலில் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
ஏற்காடு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை இன்று(மே 4) நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சம் தர வேண்டும். சுற்றுலா தலங்களுக்கு வரும் வாகனங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் சமீபத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு லெட்டர் பேடு கடிதம் அனுப்பியிருந்தார். “மரண வாக்குமூலம்” என்ற பொருள் உடன் எழுதிய அந்த கடிதத்தில், கொலை மிரட்டல் வருவதாகவும், சமீபத்தில் தனக்கு மூன்று முறை கொலை மிரட்டல் வந்ததாகவும், சுய நினைவுடன் இதை எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள கடலைக்கடை மூலை சந்திப்பு மற்றும் திருவூடல் தெருவில் பல்வேறு கடைகள் மற்றும் மார்க்கெட் உள்ளது. இதனால் அப்பகுதியில் தினமும் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை முதலே இப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. எனவே, அந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கண்காணிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மே 5 தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அன்றைய தினம் கடைகள் மூடப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வணிக அமைப்புகள் அறிவித்துள்ளன. அதன்படி ஓரிகையில் அமைந்துள்ள தற்காலிக ராஜாஜி மார்க்கெட் நாளை(மே 5) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பால், மருந்தகம் போன்ற அத்தியாவசிய கடைகள் வழக்கம் போல் இயங்கும்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம், தொப்பூர் கணவாயில் இன்று(மே 4) அதிகாலையில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி உருளைக்கிழங்கு ஏற்றிச் சென்ற கனரக வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.