Tamilnadu

News June 11, 2024

அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற எம்.பி.

image

நாடாளுமன்ற தேர்தல் முடிகள் கடந்த 4 ஆம் தேதி வெளியானது. இந்நிலையில், காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர், செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 11, 2024

ஜவுளி பூங்கா அமைக்க அழைப்பு..!

image

மதுரை மாவட்டத்தில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காஅமைக்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சங்கீதா தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு துணை இயக்குநா், மண்டல துணிநூல் துணை இயக்குநா் அலுவலகம், 39, விஸ்வநாதபுரம் மெயின்ரோடு, மதுரை -625 014 என்ற முகவரியில் மண்டல துணை இயக்குநா் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது  96595 32005 கைப்பேசி எண்களில் அழைக்கலாம்

News June 11, 2024

மருத்துவ சான்றிதழினை பதிவேற்றம் செய்யலாம் -ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் மத்திய மோட்டார் வாகன விதி எண்.5-ன் படி, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே, சாரதி மென்பொருளை பயன்படுத்தி, விண்ணப்பதாரர்களுக்கான 
மருத்துவச் சான்றிதழினை மின்னணு வாயிலாக  பதிவேற்றம் செய்ய இயலும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று (ஜூன் – 10) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

நாமக்கல் கல்லூரியில் பொதுக்கலந்தாய்வு தொடக்கம்

image

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில், 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்பு மாணவிகள் சோ்க்கை சிறப்பு இட ஒதுக்கீடு கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதில், 26 மாணவிகள் சோ்க்கை பெற்றனா். வணிகவியல், பொருளியல் துறைகளுக்கு முதல் கட்டப் பொதுக் கலந்தாய்வு நேற்று திங்கள்கிழமை தொடங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனா்.

News June 11, 2024

திருநங்கைகளுக்கு வரும் 21 ஆம் தேதி சிறப்பு முகாம்.

image

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை, ஆதார் அட்டையில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வர் மருத்துவக் காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை வழங்கிட வருகிற 21ம் தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனை திருநங்கைகள் பயன்படுத்தி பயன்படலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 11, 2024

தூத்துக்குடி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் 344 மனுக்கள்

image

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீா் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 344 மனுக்களை பெற்றுகொண்டாா் . மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

News June 11, 2024

வந்தவாசி: 7 சவரன் நகை திருட்டு

image

வந்தவாசி அருகே வெளியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த எட்டியப்பன்  -ஆதிலட்சுமி தம்பதி. நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இரவு நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ஏழு சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றனர்.    ஆதிலட்சுமி அளித்த புகாரின் பேரில் கீழ் கொடுங்கலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

News June 11, 2024

விழுப்புரம்: தொண்டர் வீட்டு விழாவில் பேரூராட்சி தலைவர்

image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த, ஒலக்கூர் மேற்கு ஒன்றியம், ஊரல் திமுக கிளைச் செயலாளர் நந்தகோபால் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் செஞ்சி சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டார். உடன் ஒலக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் இராசாராம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News June 11, 2024

ITK மையம் செயல்படுமா? தன்னார்வலர்கள் தவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக ITK என்ற திட்டம் மூலம் பல தன்னார்வலர்கள் இணைந்து மாணவர்களிடம் மாலை நேரங்களில் பாடம் நடத்தி வருகின்றனர். இத்திட்டம் கொரோனா காலங்களில் மாணவர்களிடம் இருந்த கற்றல் இடைவெளியை நீக்க கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் முதல் ITK மையம் செயல்படவில்லை பள்ளி திறந்தும் இன்று வரை வகுப்பு நடத்துவதற்கு அனுமதி வரவில்லை என வருத்தத்துடன் கூறி வருகின்றனர்

News June 11, 2024

கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகப் பகுதியில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக்கொடி ஏந்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, சங்க நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

error: Content is protected !!