India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னையை அடுத்த மீஞ்சூர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்த வடமாநிலத்தை சேர்ந்த சச்சின் (25) என்ற கூலி தொழிலாளி 2 நாட்களுக்கு முன்பு வெப்ப அலை காரணமாக மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பலியானார். அவருடன் சேர்ந்து பணிபுரிந்த வேலு (35) என்பவர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை சென்ட்ரல் – புதுதில்லி இடையே கிராண்ட் ட்ரங்க் விரைவு ரயில் (எண்-12615/12616) தினமும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த பிப்ரவரி 9 முதல் மே.8 வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் மே 9 முதல் மேலும் 3 மாதங்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ஹேமலதா(22) காஞ்சிபுரத்தை சேர்ந்த கவுதம் இருவரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி இருவரும் ஆற்காடு அருகே கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து நேற்று வேலூர் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்
நாகர்கோயில் மாநகராட்சி இடலாக்குடி பகுதியில் தனியார் நிறுவனத்தால் தெரு விளக்கு பணிகள் நடைபெறுகிறது. மக்களை அச்சுறுத்தும் வகையில் பல இடங்களில் மரக்கட்டைகளை தெரு விளக்குடன் கட்டப்பட்டுள்ளது. சில இடங்களில் மின் விளக்கு எரியாததால், வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவம் நடக்கிறது. பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மாயமான நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். அவரது இறுதி சடங்கு திசையன்விளை அருகே உள்ள கரைசுத்துபுதூரில் இன்று (மே 5) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொள்ள உள்ளார். உடன் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், தண்டலம் கூட்டு சாலை சந்திப்பில் இன்று இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ராஜேஷ் (29) வெங்கடேசன் (62)ஆகிய இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாகவும், சமூக வலைதளங்களில் அவர்கள் குடும்பத்தாரின் புகைப்படங்களை பகிர்ந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் தேனியில் இன்று கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கர் மீது பிணையில் வெளி வர முடியாதது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வேலூர் மக்களவைத் தொகுதி பாஜ கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேலூர் தனியார் ஹோட்டலில் நேற்று (மே 4) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “வேலூர் தொகுதியில் தாமரை சின்னம் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். தமிழகத்தை பொறுத்தவரை 15 தொகுதிகளில் பாஜ கூட்டணி வெற்றி பெறும். இந்திய அளவில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும்” என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தூத்துக்குடியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் கால்நடைகளை பாதுகாப்புடன் பராமரிக்க கேட்டுக் கொண்டுள்ளார். அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள்,தாது உப்பு கரைசல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தின் பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட மழை எப்போது பெய்யும் என மக்கள் காத்திருக்கிறார்கள். அதன்படி திண்ருக்கல், கொடக்கானல் பகுதியில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Sorry, no posts matched your criteria.