India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 3 நாட்கள் நடைபெற்ற வேளாண் கண்காட்சி (ஜூன் 16) நேற்றுடன் நிறைவடைந்தது. கண்காட்சியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நவீன இயந்திரங்கள், ட்ரோன்கள், சிறுதானியம் உள்ளிட்ட பாரம்பரிய விதையுடன் விவசாயிகளுக்கு அரசு வழங்கப்படும் திட்டங்கள் கூடிய 150 அரங்குகளுடன் அமைக்கப்பட்டிருந்தது. வேளாண் கண்காட்சியில் 30,000 பேர் பார்வையிட்டு சென்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் இன்று திங்கட்கிழமை (17.06.2024) முகாம் அலுவலகத்தில் நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது புத்தகம் ஒன்றையும் நினைவு பரிசாக வழங்கினார். சந்திப்பின் போது பலர் உடன் இருந்தனர் தொடர்ந்து நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி குறித்து பேசினார்.
கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நாளை (ஜூன்.18) காலை 11.00 மணிக்கு மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்களது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்துவரி பிரச்சனை, தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மனுக்கள் மூலமாக மேயரிடம் நேரடியாக வழங்கலாம் என இன்று மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்னிவீர் வாயு தோ்வுக்கான அறிவிப்பு இன்று (ஜூன் 17) வெளியாகி உள்ளது. அதில் இந்த தேர்வு 18.10.2024 முதல் இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என்றும், தோ்விற்கு விண்ணப்பிக்க 8.7.2024 முதல் 28.7.2024 வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என விமானப்படை தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தோ்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்திலேயே பதிவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி வீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். பட்டப் படிப்பு மற்றும் தொழில் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அக்னி வீர் வாயு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், திருமணம் ஆகாத 3.7.2004 முதல் 3.1.2008 இடையில் பிறந்த ஆண்,பெண் இருபாலரும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.
கண்டாச்சிபுரம் அருகே பரனூரில் இயங்கி வந்த நியாய விலை கடையானது முற்றிலும் சேதமடைந்து உயிர் சேதம் ஏற்படும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இயங்கி வருவதாக வே2நியூஸ்-ல் கடந்த மே 17ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. அதனைதொடர்ந்து தற்காலிகமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கட்டிடத்தில் நியாய விலை கடை இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஸ்ட்ராபெர்ரி பழம் சீசன் தொடங்கி உள்ளது. நீலகிரி ஸ்ட்ராபெரி பழம் மிகுந்த சுவையாக இருப்பதால் நல்ல கிராக்கி நிலவுகிறது. தற்போது ஸ்ட்ராபெரி பழம் அறுவடை தொடங்கி உள்ளது. வியாபாரிகள் சாகுபடி நிலங்களுக்கு வந்து ஒரு கிலோ
ரூ.300 விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலூர் தெற்குப்பட்டி சேர்ந்தவர் வேலுச்சாமி.இவர் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் இவரது மனைவி தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அங்கு அவரது சகோதரர் முறையில் உள்ள முத்துப்பாண்டி (22) வேலுச்சாமியின் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதை தட்டி கேட்ட அவரின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரின் மேலூர் போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், புதுச்சேரியில் நீண்ட நெடிய காலமாக மதுபான கடைகள் இருந்து கொண்டிருக்கிறது. எந்தெந்த இடங்களில் குடியிருப்புகளுக்கு இடைஞ்சல் தருகிறதோ , அந்த இடங்களில் மதுக்கடைகளை தடை செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் மக்களுக்கு இடையூராக உள்ள மதுக்கடைகள் மற்றும் ரெஸ்டோ பார்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில்,
சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7.95 லட்சம் மதிப்பீட்டில்,
கெடகார அள்ளி மற்றும் சூரன்கொட்டாய் பகுதியில் புதிதாக சிமெண்ட் சாலை, ஆழ்துளை கிணறு மற்றும் மின்மோட்டார் பைப்லைன் அமைக்கும் பணியை பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ
ஆ.கோவிந்தசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.