Tamilnadu

News June 18, 2024

நாகை: ஜூன்.20ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

image

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகூர் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டத்தை ஒட்டி ஜூன்.20ம் தேதி ஒருநாள் மட்டும், நாகப்பட்டினம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடுசெய்ய அடுத்த மாதம் 6ஆம் தேதி பள்ளிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 18, 2024

நாளை குறைத்தீர்வு கூட்டம்

image

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாளை(ஜீன்.19) காவல் கண்காணிப்பாளர் தலைமையில் குறைத்தீர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்காமல் மற்றும் திருப்தி பெறாத புகார் மனுதாரர்கள் எஸ்பியை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜான் தெரிவித்துள்ளார்கள்.

News June 18, 2024

திருநங்கைகளுக்கு 21-ல் முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட சம்பந்தபட்ட துறைகள் ஒருங்கிணைந்து வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமை கடலூரில் நடத்துகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 18, 2024

திருமண மண்டப தீ விபத்து: பார்வையிட்ட எம்.எல்.ஏ

image

கிருஷ்ணகிரி, பர்கூர் பேரூர் ஜெகதேவி ரோடு துரைஸ் மஹாலில் வடிவேல் ஆடைகள் விற்பனை செய்ய மண்டபத்தில் இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில், மஹாலில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஆடைகள் முழுவதும் எரிந்து சேதமாகின. இதை அறிந்த பர்கூர் எம்எல்ஏ மதியழகன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு வடிவேலுக்கு ஆறுதல் கூறினார்.

News June 18, 2024

வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை திருட்டு

image

சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சிக்குட்பட்ட ராமானுஜர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று குடும்பத்துடன் வந்த போது அவரது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை திருடியது தெரியவந்தது. கொண்டபாளையம் போலீசில் பிரபாகரன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News June 18, 2024

22 பேர் காயம்: ஆட்சியர் நேரில் ஆறுதல் 

image

ஏரிக்கரை பகுதியில் இன்று டாட்டா ஏசி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 22 பேர் காயமடைந்த நிலையில் இவர்கள்  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

News June 18, 2024

சென்னையில் நாளை இங்கு மின்தடை

image

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நாளை(19.6.24) பல்வேறு பகுதிகளில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதன்படி, போரூர், அடையார், பல்லாவரம், சோழிங்கநல்லூர், தாம்பரம், கிண்டி, கே.கே.நகர், வியாசர்பாடி, எழும்பூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News June 18, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் மே 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொது விநியோகத் திட்ட பொருட்களை பெற்றுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுக்கான ஒதுக்கீட்டினை நடப்பாண்டு ஜூன்-2024 மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

வேன் கவிழ்ந்து விபத்து: 22 பேர் காயம்

image

ஜவ்வாது மலை சின்னவட்டானூர் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (20). இவர் ஜவ்வாது மலையில் இருந்து பிக்கப்வேனில் 25 பேரை ஏற்றுக் கொண்டு திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்பத்தூர் ஏரி கொடி பகுதியில் வேன் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 22 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 18, 2024

அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக தொண்டர்கள் !

image

திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் சுற்றியுள்ள அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் திருப்போரூர் ஒன்றிய சேர்மனும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும் இவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் திமுக பொறுப்பாளர்கள் ரமேஷ், அன்பு, சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!