India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் 2 ஆம் ஆண்டு இயற்கை உணவுத் திருவிழா நாளை (12-05-2024) காலை 9 மணி முதல் 4 மணி வரை கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளி வளாகம், பெரியார் சிலை அருகில் நடைபெற உள்ளது. உணவு திருவிழாவில் பாரம்பரியம் உணவு, இயற்கை உணவு வகைகள், இயற்கை விளைபொருட்கள், புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, அம்மாபேட்டையில் 5 செ.மீட்டரும், வறட்டுப்பள்ளத்தில் 2 செ.மீட்டரும், எலந்தக்குட்டைமேடு பகுதியில் 1 செ.மீட்டரும் மழை அளவு பதிவானது. சமீபத்தில் தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில், வரும் 15ம் தேதி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதா தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 16,17 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. வெப்பத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் 25 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 35 டிகிரி வரை பதிவாகலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, உசிலம்பட்டி பகுதியில் 6 செ.மீட்டரும், மேட்டுப்பட்டி,கள்ளந்திரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், புலிப்பட்டியில் 4 செ.மீட்டரும், குப்பண்ணம்பட்டி, பெரியபட்டி, திருமங்கலம்,கல்லிக்குடி, சித்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவானது.
திருச்சி மாவட்டத்தில் நேற்றைய (மே.10) மழைப்பொழிவு பதிவானது. அதன் அளவை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சமயபுரம் பகுதியில் 7 செ.மீட்டரும், முசிறியில் 6 செ.மீட்டரும், தெய்வமங்கலத்தில் 5 செ.மீட்டரும், தென்பரநாடு, துறையூர் பகுதிகளில் 2 செ.மீட்டர் மழை அளவும் பதிவானது. சமீபத்தில் தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் நாளை (மே.12) மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பதிவாகக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. கோடையில் தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.
செஞ்சி பேரூராட்சி சார்பில், செஞ்சி கூட்டு சாலை திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் மற்றும் சென்னை பேருந்து நிறுத்தத்தில் கோடை வெயில் தாக்கம் கடுமையாக உள்ளதால் மக்கள் நலன் கருதி பசுமை கூரை அமைக்கப்பட்டதை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் (மே 11) நேரில் பார்வையிட்டார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் உள்ளிட்டோர் இருத்தனர்.
குடியாத்தம் கங்கை அம்மன் கோயில் சிரசு திருவிழா வருகிற மே 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் வருகை தருவார்கள். இதையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் பாதுகாக்க 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் இன்று (மே 11) தெரிவித்துள்ளார்.
மாதவரம்-எண்ணூர் வரையிலான 16 கி.மீ புதிய வழித்தடத்திற்கு சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி – கலங்கரை விளக்கம் வரை 2-ம் கட்ட திட்டம் 116 கி.மீ.க்கு செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கை தயாரிக்க முறையான டெண்டரை மெட்ரோ ரயில் நிர்வாகம் விரைவில் வெளியிட உள்ளது.
Sorry, no posts matched your criteria.