Tamilnadu

News August 6, 2025

தென்காசி: FIRST TIME வேலைக்கு போறீங்களா 15,000 CONFIRM!

image

தென்காசி இளைஞர்களே EPFO-வின் ஊழியர் வைப்பு நிதி சார்ந்த காப்பீடு (ELI) திட்டத்தின் கீழ், ₹15,000 ஊக்கத்தொகை வழங்கபடுகிறது. முதல்முறையாக EPFO-வில் பதிவுசெய்து, மாதத்திற்கு 1 லட்சத்திற்குள் சம்பாதிக்கும் புதிய ஊழியர்களுக்கு ரூ.15000 வழங்கப்படும். இரண்டு தவணைகளாக வழங்கபடுகிறது. மேலும் தகவல்களுக்கு தென்காசியில் உள்ள EPFO அலுவலகத்தை அனுகுங்க. வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

நெல்லை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி மண்டலத்தை சேர்ந்த சொகுசு நகர பேருந்துகள், மகளிர் கட்டணமில்லா விடியல் பயண பேருந்தாக மாற்றி இயக்கபட்டு வருகிறது. பொதுமக்கள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மண்டல மேலாளர் அறிவித்துள்ளார். SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!

News August 6, 2025

தி.மலையில் இன்று ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திருவண்ணாமலையில் இன்று( ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெற உள்ளது. அதன்படி: புதுப்பாளையம் பேரூராட்சி, வந்தவாசி வட்டாரம், செங்கம் வட்டாரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பெண்ணாத்தூர், தெள்ளார் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 பேர விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News August 6, 2025

திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குவிந்த 2968 மனுக்கள்

image

திருச்சி மாவட்டத்தில் 6 இடங்களில் நேற்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. அதில் திருச்சியில் 895 மனுக்களும், துறையூரில் 194 மனுக்களும், புள்ளம்பாடியில் 552 மனுக்களும், தாளக்குடியில் 260 மனுக்களும், தண்டலைப்புத்தூரில் 541, முருங்கையில் 526 மனுக்களும் என மொத்தம் 2968 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

காஞ்சிபுரத்தில் நாளையே கடைசி!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் முதல் ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை பதிவுசெய்து நாளை மாலை 5.45-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க! <<17317300>>தொடர்ச்சி<<>>

News August 6, 2025

சேலம்: அரசு அலுவலர்கள் இடமாற்றம்

image

சேலம் மாவட்ட வருவாய் அலகில், இளநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணிபுரிந்து வரும் 31 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் இருந்த தனசேகரன், ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவிற்கும், அங்கிருந்த பிரவீன்குமார் சேலம் ஆர்.
டி.ஒ. அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருந்த கார்த்திக் ஓமலூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

News August 6, 2025

காஞ்சிபுரத்தில் நாளையே கடைசி!

image

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மொத்தம் 109 கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முறையே காஞ்சிபுரம்-34, ஸ்ரீபெரும்புதூர்-8, உத்திரமேரூர்-31, வாலாஜாபாத்-19, குன்றத்தூர்-17ஆகும். இந்த பணிக்கு எழுத்துத் தேர்வு செப்டம்பர் 8-1ம் தேதிக்குள் நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கான நேர்காணல் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 6ம் தேதிக்குள் நடைபெறும். அனைவரும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News August 6, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்டம் விவரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட். 6) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 41.30 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 67.81 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 10. 66 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 10.76 அடி (18 அடி) நீர் உள்ளது. பேச்சிப்பாறைக்கு 328 கன அடி, பெருஞ்சாணிக்கு 115 கன அடி நீர்வரத்தும் உள்ளது.

News August 6, 2025

BREAKING திருப்பூர் அருகே காவல் அதிகாரி வெட்டிப்படுகொலை!

image

திருப்பூர் அலங்கியம் தளவாய்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். குடிமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்தபோது, தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக 100 எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. இதை விசாரிக்க சென்ற சண்முகசுந்தரம், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 6, 2025

கறவை மாடு வளர்ப்பு பயிற்சிக்கு நாளை விண்ணப்பம்

image

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் தேனி உழவர் பயிற்சி மையத்தில் நாளை ஆகஸ்ட்.7(வியாழன்) கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தேனி மதுரை ரோட்டில் உள்ள வேளாண்பொறியியல் துறை அலுவலகத்திற்கு எதிரே உள்ள உழவர் பயிற்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம் மேலும் விபரங்களுக்கு 98650 16174 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.

error: Content is protected !!