Tamilnadu

News April 16, 2025

குமரி மாவட்டத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

News April 16, 2025

பொதுமக்களிடமிருந்து 19 மனுக்களைப் பெற்ற எஸ்.பி

image

நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.கே. அருண்கபிலன் எஸ்.பி. பொதுமக்களை சந்தித்து அவர்ளின் குறைகளை கேட்டறிந்து 19 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்கள். ஒவ்வொரு வாரம் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

திருமண தடை நீக்கும் அற்புத கோயில்

image

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக மகுடேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News April 16, 2025

பெரம்பலூர்: கோடை காலத்தில் மக்கள் செய்யக்கூடாதவை

image

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக, பொதுமக்கள் கோடை காலத்தில் எவையெல்லாம் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதில், நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும், டீ, காபி, ஆல்கஹால் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்கவும் எனவும், மற்றும் வெற்றுக்காலுடன் வெயிலில் நடக்க வேண்டாம், . மேலும் முக்கியமாக குழந்தைகளை வாகனங்களில் தனியாக விட்டு செல்லாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.

News April 16, 2025

திருமழிசை பெருமாளை வழிபடும் நன்மைகள்

image

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் 1000 வருட ஜெகந்நாதபெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வணங்கினால் பாவங்கள் விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இங்கு சிறப்பு பூஜை செய்தால் படிப்பறிவு, அரசு வேலை, வெளிநாட்டு வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் எனவும் நம்பப்படுகிறது. *தேவைப்படுவோருக்கு பகிர்ந்து தெரியப்படுத்தவும்*

News April 16, 2025

புதுச்சேரி: பிரிந்த தம்பதிகளை சேர்த்துவைக்கும் ஆலயம்

image

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு சென்று மூலவர் வரதராஜரை வழிபட இல்லறவாழ்வில் பிரிந்து வாழும் தம்பதிகள், மீண்டும் வாழ்வில் சேர்ந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. மேலும், திருமண வரம், குழந்தைப்பேறு வேண்டுவோர் மற்றும் சொத்து தகராறு உள்ளவர்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம் உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 16, 2025

வீரபாண்டி திருவிழா நடைபெறும் நாட்கள்

image

வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி மே 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மே 6ல் அம்மன் புறப்பாடு, மே 7ல் அம்மன் பவனி, மே 8 புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, மே 9 அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், மே 10 தெற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 11 மேற்கு ரத வீதியில் ரத உற்சவம், மே 12 திருத்தேர் நிலைக்கு வருதல் நிகழ்ச்சி, மே 13 ஊர் பொங்கல் நடைபெற உள்ளது. ஷேர் செய்யவும்

News April 16, 2025

ஜிப்லிக்கு நோ சொல்லுங்க; சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

News April 16, 2025

திருவண்ணாமலை: ஓதுவார் பயிற்சி பெற நல்ல வாய்ப்பு

image

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் சார்பாக ஓதுவார் பயிற்சிப்பள்ளி நடைபெறுகிறது. இதற்கு, 13-24 வயதிற்குட்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இந்துக்கள் விண்ணப்பிக்கலாம். இலவச உணவு, உறைவிடம், மாதம் ரூ.4,000 வழங்கப்படும். விருப்பமுள்ளோர் <>இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பத்தை பதிவிறக்கி வரும் ஏப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம். *கடவுள் பணி செய்ய அற்புத வாய்ப்பு. தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்*

News April 16, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு வேலை

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் tnrd.tn.gov.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!