Tamilnadu

News August 6, 2025

வேலூரில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

image

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் (0416-2253502) நேரடியாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!

News August 6, 2025

கள்ளக்குறிச்சியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

image

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (04151-228802) நேரடியாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!

News August 6, 2025

கரூரில் இலவச மருத்துவ முகாம்

image

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செந்தில் பாலாஜி அறக்கட்டளை சார்பில், இலவச மருத்துவ முகாம் வரும் ஆகஸ்ட் 9, 10ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கோவை ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது, இதில் 30க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் வருகை புரிகின்றனர். அனைத்து வகையான ஆலோசனைகள் பரிசோதனைகள் ஒரே இடத்தில் நடைபெற உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளன.

News August 6, 2025

தருமபுரியில் VAO மீது புகார் அளிப்பது எப்படி?

image

குடிமக்கள் கோரும் சான்றிதழ்களை தராமல் இழுத்தடித்தாலோ, சம்மந்தப்பட்ட கிராமத்தில் VAO வசிக்காவிட்டாலோ VAO மீது தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் (9445000908) எழுத்து பூர்வமாக புகார் அளிக்கலாம். அளிக்கப்படும் புகார்களுக்கு 3 – 7 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். VAO மீது கொடுக்கப்படும் புகார் உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வேறொரு VAO நியமிக்கப்படுவார். ஷேர்!

News August 6, 2025

பாரதி இளைஞர் விருது; மாவட்ட அளவிலான கவிதைப் போட்டி

image

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 – 2026 ஆம் ஆண்டின் பாரதி இளைஞர் விருதிற்கான மாவட்ட அளவில் கவிதைப் போட்டி நேற்று கல்லூரியின் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், பெரம்பலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் கோ.இளவரசன் மற்றும் தனியார் கல்லூரியின் மாணவி கற்பகரட்சாம்பிகை என்பவரும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

News August 6, 2025

பட்டய பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை கூட்டுறவு மேலாண்மை நிலையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துடன் இணைந்து, ஓராண்டு கால முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி பெற்றுள்ளது. இப்பட்டய படிப்பு இரு பருவங்களாக நடக்கிறது. பயிற்சியில் சேர விரும்புவோர் www.tncu.tn.gov.in இணைய தள முகவரியில் வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள், ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 6, 2025

ஆறு இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆக.6)நடைபெறுகிறது. கள்ளக் கோட்டை தனியார் மஹால், அறந்தாங்கி தனியார் மஹால், கீரமங்கலம் மாரியம்மன் கோயில் அருகே, மாஞ்சான் விடுதி தனியார் மஹால், ஜெகதாபட்டினம் தனியார் மஹால், மீமிசல் சமுதாய கூடத்தில் நடைபெறும் முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News August 6, 2025

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 16 கிலோ குட்கா

image

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்கு வங்கம் – திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று(ஆக.6) காலை திண்டுக்கல் ரயில்வே போலீசார் சோதனையில், பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

News August 6, 2025

தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

image

பள்ளிப்பாளையம் அருகே, வெடியரசம்பாளையம் பகுதியில் 2022ல் வயதான தம்பதியை கட்டிப்போட்டு 30 லட்சம் ரூபாயை சிலர் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் ஜாமினில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் கமுதி பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற பள்ளிப்பாளையம் போலீசார், கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

News August 6, 2025

சேலம்: கணவர் முன்னே மனைவி பலி

image

சேலம்: காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், (45). இவரது மனைவி வனிதா(45). இருவரும் நேற்று(ஆக.5) இரவு டூவீலரில் குப்பூர் அருகே காயாடைம்பட்டி நோக்கி சென்று கொடிருந்தனர்ண். சேலத்தில் இருந்து வந்த லாரி டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லாரி சக்கரத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே வனிதா பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!