India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் அடுத்த மேல்பாதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திறக்கப்பட்டது. இன்று காலை கோயில் நடை திறக்கப்பட்ட நிலையில், பட்டியலின மக்கள் கோயிலுக்கு உள்ளே சென்றனர். முதல் முறையாக உள்ளே சென்று திரெளபதி அம்மனை தரிசித்ததாக மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பட்டியலின மக்கள் உள்ளே சென்று வழிபடுவதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஐகோர்ட் தெரிவித்திருந்தது.
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. *ஷேர் பண்ணுங்க
சிறப்பாக செயல்படக்கூடிய சமுதாய அமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் 2024-2025-ம் ஆண்டுக்கான மணிமேகலை விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருது பெற கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வரும் 30ஆம் தேதிக்குள் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாமென ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
சமயபுரம் எஸ்.கண்ணனூர் கிராமத்தின் விஏஓ அளித்த தகவலின் அடிப்படையில், சமயபுரம் போலீசார் நேற்று புள்ளம்பாடி பகுதியில் சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். உடனே, அந்த சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த தம்பதி கிருஷ்ணன்(70)- கனகா(65). இவ்ரகளது மகன் ஆறுமுகம் என்பவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். மாமியார் கனகாவுக்கும் மருமகள் வசந்திக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வசந்தி தனது மாமன் மகன் மைக்கல்ராஜை(21) ஏவி நள்ளிரவில் மாமியாரின் கண்ணில் மிளகாய் போடி தூவி 4 பவுன் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது.
12 வயது முதல் 21 வயது வரை உள்ள ஜூடோ வீரர்/வீராங்கனைகள் 28.04.2025 அன்று நடைபெறும் தேர்வில் ( Selection Trails ) பங்கு பெற்று பயன் பெற வேண்டுமாறும், மேலும் தகவல்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், மயிலாடுதுறை அலுவலகத்திலோ (அல்லது) 7401703459 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், மறுமார்க்கமாக மயிலாடுதுறைக்கு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நாகையை சேர்ந்த அலெக்ஸ் என்பவர் மீது, ஏற்கெனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் புனிதவெள்ளி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறையொட்டி, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், மறுமார்க்கமாக திருவாரூருக்கும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
Sorry, no posts matched your criteria.