Tamilnadu

News April 17, 2025

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள STATE BANK OF INIDA வங்கியில் 30 General Housekeeper காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 12th படித்த 25 வயது முதல் 30 வயது வரை உள்ள இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25000 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த <>லிங்க்கை<<>> கிளிக் செய்து ஏப்ரல் 31க்குள் விண்ணப்பம் செய்யுங்கள். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

திருப்பூர்: கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய எண்கள்!

image

▶️திருப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. ▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 0421-2971137/38/40. ▶️காவல் கட்டுப்பாட்டு அறை 100. ▶️விபத்து அவசர வாகன உதவி 102. ▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098. ▶️பெண்கள் உதவி எண் 181. ▶️பேரிடர் கால உதவி1077. ▶️கிராம ஊராட்சி குறை தீர் கட்டுப்பாட்டு அறை 0421 – 2971163, 1800 425 7023. ▶️சைபர் க்ரைம் உதவி எண்1930. மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 17, 2025

சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் !

image

சேலம்: தலைவாசல் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வருகிற ஏப்.27ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை தலைவாசல் மும்முடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள அரிமா அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

News April 17, 2025

விழுப்புரம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

image

விழுப்புரத்தில் வேளாண் இணை இயக்குநா் எஸ்.ஈஸ்வரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை,வேளாண் வணிகம் துறைகளைச் சார்ந்த கள அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாயப் பயிற்றுநா்கள் மூலம் அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு, விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. ஏப்.30-க்குள் தனி அடையாள எண் பெற பதிவு செய்துகொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க.

News April 17, 2025

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

image

புதுச்சேரிக்கு உட்பட்ட மணவெளி, திருக்கனூர், கொண்டாரெட்டி பாளையம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் இன்று (ஏப்.17) காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை அந்த பகுதிகளில் மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுமென்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க…

News April 17, 2025

செங்கையில் 64 ஏரிகள் தூர்வாரும் பணி துவக்கம் 

image

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 64 ஏரிகள் சமூக பொறுப்பு நிதி 5.17 கோடி ரூபாய் செலவில் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஏரிகள் துார்வரும் பணிக்கு, முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வட கிழக்கு பருவமழை துவங்கும் முன் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

News April 17, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 01.05.2025 முதல் செயல்படவுள்ள SDAT -ஸ்டார் அகாடமி மாவட்ட பயிற்சி மையத்தில் குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சிக்கு, ஆர்வமுடைய வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இம்மையத்தில் பயிற்சி மேற்கொள்வதற்கு விளையாட்டு வீரர்/ வீராங்கனைகளுக்கான தேர்வு 28.04.2025 அன்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News April 17, 2025

தென்காசி மாவட்ட உதவி எண்கள் அறிவிப்பு

image

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களின் உதவிக்காக தொலைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1070
▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0462 –2501035
▶️காவல் -100
▶️விபத்து -108
▶️தீ தடுப்பு – 101
▶️குழந்தைகள் பாதுகாப்பு -1098
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு – 1091
▶️பேரிடர் கால உதவிக்கு – 1077
உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும். அபத்தில் உள்ளவர்களுக்கு இது பெரிய உதவியாக இருக்கும்.

News April 17, 2025

கரூரில் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி !

image

கரூர்:தாட்கோ மூலம், டிப்ளமோ ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி வழங்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாக, பல்வேறு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, குடும்ப வருமானம் 3 லட்சம் உள்ள 18 – 30 வயதிற்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க!

News April 17, 2025

வேளாண் அடுக்கு திட்டத்தின் கால அவகாசம் நீடிப்பு

image

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட வேளான் இணை இயக்குனர் பெரியசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் நில விவரங்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 42 ஆயிரம் விவசாயிகள் இன்னும் பதிவு செய்யாமல் இருப்பதால் இதற்கான காலக்கெடுவை ஏப்.30 வரை நீட்டித்திருப்பதாக அதில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!