India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தூத்துக்குடி மாவட்டத்தில் 11துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியம், புதூர் ஊராட்சி ஒன்றியம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த 11 பேரை நேற்று இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்; மாற்றுத்திறனாளிகளுக்காக மே 29,30 ஆகிய தேதிகளில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்று நீதிமன்றம் நடைபெற உள்ளது. எனவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது புகார்களை ஏப்.30ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94999 33236 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு, மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சுய உதவி குழுக்கள் சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. குமரி மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக் குழுக்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் செயல்படும் ஊரக நகர் புற வாழ்வாதார இயக்க அளவில் வரும் 30ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மானாமதுரை: சிவகங்கை, மானாமதுரை பகுதி பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் பகல் நேரத்தில் சென்னைக்கு நேரடியாக ரயில் வசதி இல்லாததால், பேருந்துகளில் திருச்சிக்குச் சென்று, அங்கிருந்து ரயிலிலோ, பேருந்திலோ பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சென்னையிலிருந்துகாரைக்குடி வரை தினசரி இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயிலை மானாமதுரை சந்திப்பு வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதி பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள இருமன்குளத்தை சேர்ந்தவர் மருதையா என்ற யோகா மருதையா (50). யோகா மாஸ்டரான இவர் நேற்றிரவு புதிய வீடு கட்டும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து புளியங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .
தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 135 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது தோல்வி அடைந்திருக்கலாம். மேலும், தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்திற்கு பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்து உள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்டவட்டார வளர்ச்சி அலுவலரிடம் (வட்டார ஊராட்சி) வரும் 21-ந் தேதி (திங்கட்கிழமை) வரை அளிக்கலாம்.
கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மயிலாடுதுறை மீனவர்கள் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் ஆயுதங்களால் தாக்கி செல்போன், 50 கிலோ மீன், ஜிபிஸ் கருவி ஆகியவற்றை பறித்து சென்றதாக மீனவர்கள் புகார். மேலும் தாக்குதலில் 4 மீனவர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரத்தில், 200 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த<
விருதுநகரில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் பயிலும் எத்துப்பல் கொண்ட 600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஆட்சியர் ஜெயசீலன் உதவி செய்தார். இதில் மக்களின் குறையறிந்து அக்குறைகளைக் கடமையென எண்ணிச் சேவையாற்றுவதே அரசுப் பணியாளர்களின் கடமை. அத்தகைய கடமையைச் சிறப்பாகச் செய்து வரும் ஆட்சியர் ஜெயசீலனுக்கு வாழ்த்துகள் என அமைச்சர் KKSSR தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.