India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோயிலாகும். இந்த கோவிலில் சாமிக்கு கார்த்திகை மார்கழி தை ஆகிய மூன்று மாதங்கள் மட்டுமே வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்வது வழக்கம். இன்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்வதாக இருந்தது. தொடர் மழையின் காரணமாக இன்று நடைபெற இருந்த வெண்ணை காப்பு அலங்காரம் மற்றொரு நாளைக்கு மாற்றப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மற்றும் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், ஆறு குளம் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் குழந்தைகளை தனியாக குளிக்க செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனவும், வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும் மெதுவாகவும் இயக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மழைக்கால எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் மற்றும் தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் வாகனத்தை இயக்க வேண்டாம் எனவும், ஆறு குளம் போன்ற நீர்நிலைப் பகுதிகளில் குழந்தைகளை தனியாக குளிக்க செல்வதை அனுமதிக்க வேண்டாம் எனவும், வாகனங்களை இயக்கும்போது கவனமாகவும் மெதுவாகவும் இயக்குமாறு நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மழைக்கால எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் கார்திகை மாத வியாழக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர்சிறப்பு அலங்காரம் பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாளை கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் களிமண்ணால் தயார் செய்யப்பட்ட, ஒரு முகம், 2 முகம், 3 முகம், பஞ்சமுகம், அச்சு விளக்குகள், பாவை விளக்கு உள்ளிட்ட பல்வேறு விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மண் விளக்கு, அச்சு விளக்கு, மாடல் விளக்கு, சுவாமி விளக்கு, கலர் விளக்கு உள்பட 40 வகையான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டன.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக அதிகரித்துள்ளது. முட்டை விலை 590 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.110 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
1.இடைநின்ற மாணவனை பள்ளியில் சேர்த்த துணை ஆய்வாளர்
2.எஸ் பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
3.செல்போன் கடையில் புகுந்த சாரைப்பாம்பு
4.நாமக்கல்: பெண்கள் மீதான வன்கொடுமை தடுக்க நடவடிக்கை
5.நாமக்கல்லில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுப்பிரமணியன் (9498173585), திருச்செங்கோடு – செந்தில்வேல் பெருமாள் (9498174114), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
ராசிபுரம் கடைவீதி பகுதியில் வினோத் குமார் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் இன்று 6 நீளம் சாரை பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்த போதும் மக்கள் அச்சம் அடைந்தனர். பின்னர் இது குறித்து ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் செல்போன் கடையில் பதுங்கி இருந்த 6 அடி நீளம் சார பாம்பை உயிருடன் பிடித்தனர்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வரும் 13-12-2024 அன்று, மாலை 6:30 மணி அளவில் பரமத்தி வேலூர் அண்ணா சிலை அருகில் நடைபெற உள்ளது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகிக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்க உள்ளார்.
Sorry, no posts matched your criteria.