India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று 18.12.2024 டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V.S.மாதேஸ்வரன் M.P திருச்செங்கோடு கொக்கராயன்பேட்டை பகுதியில் ஒற்றை வழி மேம்பாலம் ஒன்று அனுமதிக்கப்பட்டுள்ளது,ஆனால் தற்போது அது திருத்தப்பட்டு இரட்டை வழி மேம்பாலம் ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. எனவே இரட்டை மேம்பாலம் அமைக்க கோரிக்கை மனு அளித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் 20ந் தேதி 11 மணிக்கு நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும் மற்றும் திருச்செங்கோடு கோட்டத்திற்கு பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளிலும் நடைபெற உள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அதன்படி நாமக்கல் காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் குறைதீர் மனு கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். பொதுமக்களின் குறைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருச்செங்கோடு இந்தியன் பப்ளிக் பள்ளியின் ஹைதராபாத்தில் நடந்த மதிப்புமிக்க ET TECH X விருதுகளில், 2024-25ஆம் ஆண்டின் கல்வித் தலைவர் விருது நிர்வாக இயக்குநர் டாக்டர். சி. ஷிவ்குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது நல்ல மாற்றத்தை உண்டாக்கி, கல்வியின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்களைக் கொண்டாடுகிறது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றிவந்தார். நேற்று மாலை வேலையை முடித்துக்கொண்டு திருச்செங்கோட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருக்கும்போது கொக்கராயன்பேட்டை என்ற இடத்தில் எதிரே வந்த டூவீலர் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்று 4 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 10 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 15 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 84.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி மாத மூன்றாம் தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மஞ்சள் நிற உடையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் ஆஞ்சநேயர் பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை (டிச.19) காலை 9 முதல் மாலை 5 மணி வரை வளையக்காரனூர், பல்லக்காபாளையம், ஆலத்தூர், புதுப்பாளையம், மலையடிபாளையம், மஞ்சுபாளையம், எக்ஸல் கல்லூரி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது. அதேபோல்,வலையபட்டி, கோட்டபாளையம் மற்றும் சில பகுதிகளிலும் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1.நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம் ரூ 5.70
2.நாளை எலச்சிபாளையம் வட்டாரத்திற்குட்பட்ட இளநகர் கிராமத்தில் சிறப்பு மண் பரிசோதனை முகாம்
3.நாமக்கல் தூசூர் ஏரி நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
4.நாமக்கல்லில் தொழில்முனைவு பயிற்சி
5.கறிக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு
நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு பகுதிகளில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நாளை காலை 9:30 மணிக்கு வார்டு எண்.24 ஜெட்டிகுலத் தெரு மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.31 நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.