India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (05/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9894170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மாவட்ட தலைவர் தேர்தல் கருத்து கேட்பு கூட்டம் இன்றைய தினம் நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ராதா பிரசாத் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வெண்ணந்தூர் ஒன்றியம், மூலக்காடு ஊராட்சி அதிமுக இளம்பெண் பாசறை செயலாளர் ஆர்.சுகந்தி மற்றும் தேமுதிக கிளை செயலாளர் வி.சின்னதுரை ஆகியோர் தலைமையில் அதிமுக மற்றும் தேமுதிக கட்சியிலிருந்து 50 பேர் விலகி KRN ராஜேஷ்குமார் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.
நடிகை கௌதமி அதிமுகவின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கலந்துகொண்டு கட்சியின் கொள்கை பற்றி எடுத்துரைத்து கூறி வருகிறார். அதனை தொடர்ந்து இன்று காலை நாமகிரிப்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளை கலந்து கொள்ள வருகை தந்த போது ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் பேரூர் செயலாளர் மணிக்கண்ணன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதிப்பு, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக போராட வேண்டும் என பாஜக சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளரும், பாஜக மாநில துணைத் தலைவருமான கே.பி.ராமலிங்கம் நாமக்கல்லில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தை பாஜக கையில் எடுத்து தீவிரமாக களமாடி வருவது கவனிக்கத்தக்கது.
நாமக்கல், கபிலர்மலை அரையநாடு அல்லாள இளைய நாயகர் அறக்கட்டளை சார்பில் நேற்றைய தினம் முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான தங்கமணி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோருக்கு பட்டக்காரர் சார்பாக விழா குழுவினர் தை 1இல் நடைபெறும் மாமன்னர் அல்லாள இளைய நாயகரின் அரசு விழா அழைப்பிதழ் அவர்களது இல்லத்தில் வழங்கப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 530 காசுகளாக நீடித்து வந்தது. இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக குறைந்துள்ளது. முட்டை உற்பத்தி அதிகரிப்பு மற்றும் முட்டை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் விலை சரிவடைந்துள்ளது.
நாமக்கல் மாநகராட்சியில் கால்நடை மருத்துவரின் சான்று பெற்று ஆடுவதைக் கூடங்களில் வெட்டப்படும் ஆட்டு இறைச்சியை மட்டுமே விற்பனை செய்யுமாறு மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளார். மேலும் இறைச்சி விற்பனை கடை உரிமையாளா்கள் வாரச் சந்தை வளாகத்தில் உள்ள ஆடு வதைக் கூடத்தில் ஆடுகளை வெட்டி சுகாதரமான, பாதுகாப்பான முறையில் இறைச்சியை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 25 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 25 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (04/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9894178628), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.