India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (10/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
குமாரபாளையத்தில் பிறந்து நாமக்கல் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்தவர் நகைச்சுவை நடிகர் பாண்டு. 1981ஆம் ஆண்டில் ’கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படம் மூலாம் அறிமுகமாகி, நூற்றுக்கணக்கான படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சிறப்பான ஓவியராகவும் இருந்தவர். அதிமுக கொடி, சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு தனது 74வது வயதில் பாண்டு உயிரிழந்தார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.3.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வெயில், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு சற்று குறைந்தது. இதன் காரணமாக முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.80 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் உமா அவர்கள் தலைமையில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, அடுக்குமாடி குடியிருப்பில் வீடு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 340 மனுக்களை, பொதுமக்கள் வழங்கினர். இந்த கூட்டத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில், மக்களுடன் முதல்வர் திட்ட 3-ம் கட்ட முகாம் நடைபெற்று வருகிறது. நாளை 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற உள்ளது. இதில், அமைச்சர் மதிவேந்தன், எம்பி ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாமக்கல் பரமத்தியில் அதிகபட்சமாக 101.3° டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் , கர்ப்பிணிப்பெண்கள் , பெரியவர்கள் , குழந்தைகள் மதிய வேளையில் அதிகம் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க இங்கே <
நாமக்கல்,பரமத்தி வேலூர் பகுதியில் நேற்று நாட்டுக்கோழி சந்தை நடைபெற்றது. இங்கு திருச்செங்கோடு, கந்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாட்டுகோழிகளை வியாபாரிகளும், விவசாயிகளும் கொண்டு வந்து இருந்தனர்.இந்தநிலையில் நஞ்சை, இடையாறு பகுதியில் கோயில் திருவிழா நடைபெறும் காரணத்தால் கடந்த வாரம் 550க்கு விற்பனையான நாட்டுக்கோழி, தற்போது 650க்கு விற்பனை செய்யப்பட்டதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.3.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. வெயில், தீவன விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் பண்ணை கொள்முதல் விலை 3.80 ஆகவே நீடித்தது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (09/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.