Namakkal

News September 12, 2025

நாமக்கல்: ஊராட்சி அலுவலகத்தில் வேலை!

image

நாமக்கல்: தமிழ்நாடு ஊராட்சி அலுவலகங்களில் கிளர்க், டிரைவர், அலுவலக உதவியாளர், வாட்ச் மேன் ஆகிய பணிகளுக்கு காலிப் பணியிடங்கள் வெளியாகியுள்ளன. இதில், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 7 காலியிடங்கள் உள்ளன. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.19,500 முதல் ரூ.58,500 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>பண்ணுங்க.

News September 12, 2025

நாமக்கல் ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை

image

நாமக்கல்: எர்ணாபுரம் தனியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆட்சியர் தலைமையில், சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற ஆட்சியர் துர்கா மூர்த்தி, ‘ இருசக்கர வாகனம் என்பது நமக்கு பயன்படும் உபகரணமாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அதற்கு நாம் இரையாகக் கூடாது’ என மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் .

News September 12, 2025

நாமக்கல்: பட்டாவில் பெயர் சேர்க்கனுமா? எளிய வழிமுறை

image

▶️திண்டுக்கல் மக்களே.., உங்களது பட்டாவில் வாரிசு பெயர்களை சேர்க்க இனி எங்கும் அலைய வேண்டாம்.
▶️இறந்த நில உடமைதாரர்களின் பெயர்களை நீக்க, அவர்களின் வாரிசுகளை அதில் சேர்க்க அரசு சார்பாக எளிய வசதி செய்யப்பட்டுள்ளது.
▶️இதற்கு Citizen Portal வாயிலாக விண்ணப்பிக்கலாம். அல்லது அருகே உள்ள இசேவை மையத்தை அணுகலாம்.
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

நாமக்கல்: தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் ‘நிமிா்ந்து நில்’ என்ற உயா்கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று(செப்.11) ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில், உயா்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியா்கள் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தில் மாணவா்களை பங்கேற்க செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினார்.

News September 12, 2025

நாமக்கல்: ரேஷன் கார்டில் பிரச்னையா..? இங்க போங்க!

image

நாமக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் நாளை(செப்.13) ரேஷன் கார்டு குறைதீர் நாள் முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல், இராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

நாமக்கல்: ரிசர்வ் வங்கி வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️நாமக்கல் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது.
▶️இப்பணிக்கு இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, மற்றும் நேர்காணல் முறையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
▶️விண்ணப்பிக்க செப்.30ஆம் தேதியே கடைசி நாள்
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க!
உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 12, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று(செப்.12) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் போன்ற காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. முட்டையின் விலை தொடர்ந்து ரூ.5.15 ஆகவே நீடிக்கிறது.

News September 12, 2025

நாமக்கல்லில் கல்விக் கடன் முகாம்!

image

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் (ம) மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம், வரும் செப்.20ஆம் தேதி திருச்செங்கோடு ரோடு, எர்ணாபுரம் CMS பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. மேலும் கல்விக்கடன் பெற தேவையான சான்றுகளுடன் முகாமில் பங்கேற்கலாம்.தங்கள் விண்ணப்பங்களை <>இங்கே<<>> கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

News September 12, 2025

நாமக்கல் மக்களே SUPER வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, ஆட்சியர் கூறியது, ஏவெடிபொருட்கள் சட்டத்தின் கீழ், தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விரும்புவோர், விதிமுறைகளைப் பின்பற்றி, ஆன்லைன் மூலம் வருகிற அக்.10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கூறியுள்ளார் .

News September 12, 2025

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றமில்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்றது. கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளபோதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 15 நாட்களாக முட்டை விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!