Namakkal

News January 6, 2025

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தாமரை மாலை தரிசனம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற18 அடியில் ஒரே கல்லால் ஆனா ஆஞ்சநேயருக்கு இன்று பல்வேறு திவ்ய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆஞ்சநேயருக்கு பிடித்த தாமரை மாலை சாத்தி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சுவாமியை காண ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து ஆஞ்சநேயரை வணங்கி செல்கின்றனர்.

News January 6, 2025

யோகாவில் உலக சாதனை

image

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் அரவிந்த் யோகா மையம் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 21 மாணவ மாணவியர் யோகா உலக சாதனை செய்து அசத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் அமைப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். மேலும் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், முன்னாள் அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன் போட்டிகளை துவங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

News January 6, 2025

நாமக்கல்லில் முட்டை விலை 50 காசுகள் சரிவு

image

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்த நிலையில், நேற்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக 25 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக குறைந்தது. மேலும், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 2 நாட்களில் மட்டும் அதிரடியாக 50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

News January 6, 2025

ஜல்லிக்கட்டில் பாதுகாப்பு: கலெக்டர் அறிவுறுத்தல்

image

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, சாலப்பாளையம், அலங்காநத்தம், போடிநாயக்கன்பட்டி, சேந்தமங்கலம், மக்ரூட், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகின்றன.அசம்பாவிதம் நிகழாதவாறு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கால்நடைத் துறை, வருவாய்த் துறை, காவல் துறையினர் செய்திருக்க வேண்டும் என ஆட்சியர் உமா அறிவுறுத்தியுள்ளார்.

News January 6, 2025

புதிய சிபிஎம் மாநில செயலாளருக்கு வாழ்த்து

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் நாமக்கல் திருச்செங்கோடு ராசிபுரம் குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News January 6, 2025

நாமக்கல்லில் நாளை முத்தரப்பு கூட்டம்

image

நாமக்கல்லில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து, மரவள்ளி கிழங்கு பயிர் செய்யக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற (ம) சட்டமன்ற உறுப்பினர்கள், சேகோசர்வ் மேலாண்மை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News January 6, 2025

நாமக்கல் பெயர் காரணம் தெரியுமா?

image

முட்டை உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாமக்கல், ‘முட்டை நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இருப்பினும் நாமகிரி என்ற பெயரிலிருந்து நாமக்கல் என உருவானதாகும், இவ்வூரின் பழைய பெயர் ‘ஆரைக்கல்’ என்பதாகும் என கூறப்படுகிறது. உண்மையில் நாமக்கல் என்ற பெயர் வரக் காரணம் என்ன? என்பது குறித்தும் உங்கள் ஊரின் சிறப்புகள் குறித்தும் கீழே கமெண்ட் பண்ணுங்க!

News January 6, 2025

பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில்
பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார்
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்
நாளை 6 ந் தேதி
காலை 9 மணியளவில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட அரங்கில்
பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்க உள்ளார்கள்.

News January 5, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 25 பைசா குறைக்கப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மழை, பனி. குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று ஒரு முட்டையின் விலை ரூ 5.05 ஆக இருந்தது.

News January 5, 2025

ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில், பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் முன்னிலையில் 07.01.2025 அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மரவள்ளி கிழங்கிற்கு உரிய விலை நிர்ணயம் செய்து மரவள்ளி கிழங்கு பயிர் செய்யக்கூடிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது.

error: Content is protected !!