Namakkal

News January 8, 2025

நாமக்கல்லில் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (KVK), வருகின்ற 20.01.2025 முதல் 24.01.2025 வரை (5 நாட்கள்) பட்டியலின மக்களுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவிற்கு 04286-266345, 04286 266650, 9787788005 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

நாமக்கல் மாவட்டத்தில் பெண் வாக்காளர்களே அதிகம்

image

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், குமாரபாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை நேற்று மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டார். அதில் ஆண் வாக்காளர்கள் 702555, பெண் வாக்காளர்கள் 751465 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

News January 7, 2025

பள்ளி மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

image

நாமக்கல் துறையூர் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவர் விடுதியில் தங்கி படித்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு விடுதியின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீஸில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

News January 7, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (07/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9894177823), ராசிபுரம் – அம்பிகா (9498106520), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 7, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல்லில் இன்று 7ஆம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 என நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் 1 முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆகவே நீடிக்கிறது.

News January 7, 2025

ஏஜென்சி மூலம் டார்ச்சர் செய்த வங்கிக்கு அபராதம்

image

நாமக்கல்லை சேர்ந்த அனுபிரசாத் என்பவர், கடந்த 2007ல் IOB வங்கியில் ரூ.2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணம் செலுத்த முடியாததால், கோர்ட் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால், இன்னும் ரூ.7 லட்சம் கட்ட வேண்டும் என தனியார் ஏஜென்சி மூலம் வங்கி மிரட்டல் விடுத்துள்ளது. அதனால், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டை அவர் நாட, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க IOBக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News January 7, 2025

இளைஞர்களுக்கான சமூக வலைதள பயிற்சி பாசறை கூட்டம்

image

திருச்செங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பாக இளைஞர்களுக்கான சமூக வலைதளப் பயிற்சி பாசறை கூட்டம் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் அன்பு தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு இளைஞர் அணி உறுப்பினர்களுக்கு திராவிட இயக்கத்தின் வரலாற்றை எடுத்துரைத்தார்.

News January 7, 2025

சிறப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலகபிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் மார்கழி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு இன்று காலை 10.30 மணிக்கு பஞ்சாமிருதம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் என அபிஷேகம் பின் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ஆஞ்சநேயர் காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்து வருகின்றனர்.

News January 7, 2025

திருநங்கை விருது விண்ணப்பம் வரவேற்பு: ஆட்சியர் தகவல்

image

2024-2025ஆம் ஆண்டிற்கான திருநங்கை விருது திருநங்கையர் தினமான ஏப்.15ல் வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.விருதுக்கான விண்ணப்பங்களை தமிழக அரசின் விருதுகள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே வரவேற்கப்படுகிறது.கடைசி நாள் பிப்.10..விதிமுறை; அரசின் உதவி பெறாமல் சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும், நலவாரியத்தில் உறுப்பினராக இருக்ககூடாது.

News January 7, 2025

ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

image

ஸ்டொலைட் ஆலை மூடப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும்,1000-த்திற்கும் மேற்பட்ட லாரிகள் போதிய வருவாயின்றி இயக்கப்பட்டு வருவதாகவும், சுமார் ரூ. 1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக ஆலையைத் திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள், நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

error: Content is protected !!