India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்லில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நாமக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் 17235 SMVT பெங்களூரூ – நாகர்கோவில் ரயிலை பயன்படுத்தி எளிதாக செல்லலாம். தினசரி இரவு 11:00 மணிக்கு 17235 நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் ரயில் நிலையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:20 மணிக்குள் நாகர்கோவில் சென்றடையும்.
நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர்கள் சங்கம், நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் பெண்கள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கியது. பல்வேறு நிலைகளில் இந்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் தொழில் அதிபர் ஸ்ரீதேவிமோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பரிசுத்தொகை, பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் பாண்டமங்கலம் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன்(20). நேற்று முன்தினம் தமிழரசன் ப.வேலூரிலிருந்து பாண்டமங்கலம் நோக்கி தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். பொத்தனூரில் தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு டூவீலர் தமிழரசன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், தமிழரசனும், மற்றொரு டூவீலரில் வந்த இளைஞரும் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (16/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த வாரங்களில் ஒரு முட்டை விலை ரூ.3.80 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமரின் கௌரவ நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் நாமக்கல் மாவட்டத்தில் உடனடியாக தங்களுடைய கணினி பட்டா, ஆதார், கைப்பேசி எண் ஆகியவற்றுடன் அருகில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலகம் அல்லது பொது சேவை மையத்தினை அணுகி மார்ச் 31-க்குள் இலவசமாக பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் நாமக்கல்லில் பார்க்க வேண்டிய பிரசித்தி பெற்ற கோயில்கள்.▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் ▶️ அர்த்தநாரீஸ்வரர் கோயில், (திருச்செங்கோடு)▶️சுவாமி வெங்கடாஜலபதி கோயில் (நைனா மலை) ▶️ அரபாலீஸ்வரர் கோயில் (நாமக்கல்) ▶️ பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (கபிலர்மலை) ▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில் (காளிப்பட்டி) ▶️ கொல்லிமலை எட்டுக்கை அம்மன்
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மார்ச் மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. இதில் பல ஆயிரம் பணியிடங்கள் நிரப்படவுள்ளனர். எனவே 10-ம் வகுப்பு, பிளஸ்-2, டிப்ளமோ, ஐ.டி.ஐ, டிகிரி உள்பட பல்வேறு கல்வித் தகுதி உள்ளோரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதை உங்களுடைய நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (15/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி, ராசிபுரத்தை அடுத்த மங்களபுரம் பகுதியில் நாளை (16.03.2025) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டில் மங்களபுரம், தம்மம்பட்டி, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 700 காளைகளும், 300 வீரர்களும் கலந்துக் கொள்ள உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.