Namakkal

News January 17, 2025

நாமக்கல்: இளவட்டக்கல் தூக்கி அசத்திய பெண்கள்

image

பொங்கல் விழாவின் ஒருபகுதியாக நேற்று காணும் பொங்கல் கொண்டாடடப்பட்டது. இதையொ ட்டிநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி ஆண்களுக்கு இணையாக பெண்களும் போட்டி போட்டு இளவட்ட கல்லை தூக்கினார்கள். 47 கிலோ கல்லை பெண்கள் பலா் சா்வ சாதாரணமாக தூக்கியது பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.

News January 16, 2025

பெண் எரித்துக்கொலை: தந்தை, மகன் கைது

image

நாமக்கல்லில் கூலி தொழிலாளி பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் தந்தை, மகன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பூங்கா நகரில் தொழிலாளி பூமாரி என்பவரை கொன்ற மேஸ்திரி மாரியப்பன் மற்றும் அவரது மகன் சேட்டு என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலி கேட்டு தகராறு செய்ததால் பூமாரியை கொன்றதற்காக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News January 16, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (16/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 16, 2025

பி.ஆர்.சுந்தரம் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

image

மிக நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட சுந்தரம் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாது அதற்கு முன்பும் பல்வேறு நிலைகளில் பல பொறுப்புகளில் சிறப்பாக மக்கள் பணியாற்றி வந்தவர் ஆவார். 2021-ஆம் ஆண்டு முதல் திமுக-வில் இணைந்து, கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் சுந்தரம் அவர்கள் பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News January 16, 2025

நாமக்கல்லுக்கு வந்தடைந்த 2600 டன் கோதுமை

image

நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு நேற்று பஞ்சாப் மாநிலத்திலிருந்து 42 பெட்டிகளில் 2600 டன் கோதுமை நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது. இவற்றை சுமார் 150 லாரிகள் மூலம் நல்லிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பொருள் வாணிப கிடங்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து நாமக்கல் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

News January 16, 2025

BREAKING நாமக்கல்: Ex எம்எல்ஏ காலமானார்!

image

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் சட்டமன்றத்தின் முன்னாள் அதிமுக உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் வயது மூப்பின் காரணமாக இன்று காலை மறைந்தார். இவர் 1996 மற்றும் 2001ல் அதிமுக இராசிபுரம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2004ம் ஆண்டு நாமக்கல் நாடளுமன்ற உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021 ஜூலை 11ல் திமுகவில் இணைந்தார்.

News January 16, 2025

2 நாளில் ரூ.34.77 லட்சத்துக்கு காய்கறி விற்பனை

image

நாமக்கல் உழவர் சந்தையில் மாட்டு பொங்கலையொட்டி நேற்று 31 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.13 லட்சத்து 89 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகையை யொட்டி 45 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ரூ.20 லட்சத்து 88 ஆயிரத்துக்கு விற்பனையானது. கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.34 லட்சத்து 77 ஆயிரத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனையாகின.

News January 16, 2025

பொங்கல்: நாமக்கல்லில் கரும்புகள் தேக்கம்

image

நாமக்கல்லில் கரும்புகளை விற்பனைக்கு கொண்டு வந்த சிறு வியாபாரிகள், போதிய அளவில் விற்பனையாகாததால் கவலையடைந்துள்ளனர். தமிழக அரசு சார்பில் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் கரும்பு விநியோகிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் கரும்புகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும், முன்பிருந்ததுபோல இளைஞா்கள், சிறுவா்கள் கரும்பு சாப்பிட விரும்புவதில்லை என வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

News January 15, 2025

நாமக்கலில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பணி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.

News January 15, 2025

வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் மாலை வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

error: Content is protected !!