India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியுடன் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம், வருகின்ற (20.09.2025) சனிக்கிழமை எர்ணாபுரம் CMS பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம், மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து CMS கல்லூரிக்கு காலை 9.30 மணிக்கு கல்லூரி பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்படுவோருக்கு ஷேர் செய்யவும்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (செப்.18) முகாம் நடைபெறும் இடங்கள்:
▶️நாமக்கல் மாநகராட்சி – சமுதாயக்கூடம் ரெட்டிபட்டி.
▶️மோகனூர் – மாசடச்சி திருமண மண்டபம் மோகனூர்.
▶️புதுச்சத்திரம் – தங்கம் மஹால் புதுச்சத்திரம்.
▶️சேந்தமங்கலம் – சமுதாய நலக்கூடம் பொம்மசமுத்திரம்.
▶️பரமத்தி – வெங்கடேஸ்வரா சமுதாயக்கூடம் பரமத்தி.
▶️திருச்செங்கோடு –  சமுதாய நலக்கூடம் அங்காளம்மன் நகர், சித்தாளந்தூர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 17.09.2025 புதன்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ நடைபெறும் இடங்கள்: நாமக்கல் மாநகராட்சி ரெட்டிப்பட்டி சமுதாயக்கூடம், மல்லசமுத்திரம் பேரூராட்சி நந்தவன பாவடி செங்குந்தர் திருமண மண்டபம், எலச்சிபாளையம் வட்டாரம் பொன்காளியம்மன் திருமண மண்டபம், இராசிபுரம் வட்டாரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் வழியாக வரும் விழாக்காலங்களை முன்னிட்டு இயக்கப்படவுள்ள 06121/06122 சென்னை – செங்கோட்டை – சென்னை சிறப்பு ரயிலிலுக்கும், 06053/06054 நாகர்கோவில் – சென்னை – நாகர்கோவில் ரயிலிலுக்கும் நாளை காலை 8 மணிக்கு முன்பதிவு துவங்கவுள்ளது. எனவே, நாமக்கல் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி விடுமுறைக்கு சென்னை, மதுரை, திருநெல்வேலி, செல்வதற்கு பயனடைந்துகொள்ளவும்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 16) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 525 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டது.

நாமாக்கல் மாவட்டத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.16) 18 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, வெளியே செல்லும்போது குடையுடன் போங்க!

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நாமக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை – செங்கோட்டை – சென்னை (வண்டி எண்: 06121/06122)
நாகர்கோவில் – சென்னை – நாகர்கோவில் (வண்டி எண்: 06053/06054)
ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

▶️நாமக்கல் மக்களே – UPSC-யில் Accounts Officer வேலைவாய்ப்பு!
▶️நிறுவனம்: Union Public Service Commission (UPSC)
▶️பதவி: Accounts Officer
▶️காலிப்பணியிடங்கள்: 35
▶️தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு முடித்திருந்தால் போதும்
▶️சம்பள வரம்பு: ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை
▶️விண்ணப்ப முடிவுத் தேதி: 02.10.2025
▶️விண்ணப்பிக்க: கீழ்கண்ட <
▶️உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்

நாமக்கல் மக்களே..பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல், பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள், என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

நாமக்கல் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
Sorry, no posts matched your criteria.