India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் நடைபெற்ற மேரா யுவ பாரத் திட்டத்தின் கீழ் இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கினார். மாவட்ட இளையோர் அலுவலர் கீர்த்தனா உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர், மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் பாண்டமங்கலம் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இன்று புரட்டாசி மாத பிறப்பைமுன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. காலை முதல் பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மைய வளாகத்தில் வரும் செப்.19ல் காலை 10.30 மணி அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. 10, 12, டிப்ளமோ, ஐடிஐ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். இதில் பங்கேற்க வேலையளிப்போரும், வேலைநாடுநரும் tnprivate jobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 04286222260 எண்ணில் அழைக்கவும்.

நாமக்கல் மக்களே.. மத்திய புலனாய்வு துறையில் காலியாக உள்ள பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 455 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️கல்வித் தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.
▶️சம்பளம்: ரூ.21,700-ரூ.69,100.
▶️வயது வரம்பு: 18-27 வரை.
▶️கடைசி தேதி: செப்டம்பர் 28.
இந்த <

நாமக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

நாமக்கல்லில் முக்கிய வழிபாட்டு தலங்களில் ஒன்றாக விளங்கும், நைனாமலை வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு என்பது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இன்றைய தினம் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தர்கள் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்து இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வரதராஜ பெருமாளை வழிபாடு செய்வர். இவ்வழிபாட்டின் மூலம் வாழ்வில் நிம்மதியும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்.

நாமக்கல் மக்களே இந்த மாதத்திற்கான வேலை வாய்ப்புகள்;
▶️Power Grid – https://www.powergrid.in/
▶️IOCL – https://iocl.com/
▶️Intelligence Bureau – https://www.mha.gov.in/en
▶️UPSC – https://upsc.gov.in/
▶️Bank of Maharashtra – https://bankofmaharashtra.in/
▶️TNPSC TANGEDCO – https://www.tnpsc.gov.in/english/notification.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க மக்களே..!

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 30 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் தலா 25 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும், அதிகபட்சமாக 95 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மக்களே..மெரி பஞ்சாயத்து செயலி கிராம மக்கள் இனி எல்லா விதமான புகார்களையும் நேரடியாக பதிவு செய்யலாம் ✅
‘Grievance/Complaint’ பிரிவில்:
➡️ உங்கள் பெயர்
➡️ கிராமம்
➡️ புகார் விவரங்கள் உள்ளீடு செய்து, தேவையான ஆவணங்களையும் இணைக்கலாம்.
▶️புகார் செய்தவுடன் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்!
▶️புகாரின் நிலையும், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் நேரடியாகக் கண்காணிக்கலாம். இதைஅனைவருக்கும் SHARE பண்ணுங்க!

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலராக செயல்பட்டு வந்த, பிரபாகரன் பணத்திற்காக கடத்தப்பட்ட நிலையில் சில நாட்களுக்குப் பிறகு, பள்ளிபாளையம் போலீஸாரால் பிரபாகரன் மீட்கப்பட்டார் இந்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மணிமாறன், மருது பாண்டியர் ,ஈஸ்வரன் ஆகிய மூவரை இன்று பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து, குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.