India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவி துளசிமதிமுருகேசன் பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டி பரிசும் வழங்கி வாழ்த்தினர். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற விழாவில் விளையாட்டு வீரர்களுக்கான விருதை குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு அவர்களிடமிருந்து இன்று பெற்றுக் கொண்டார். அவருக்கு நாமக்கல் மாவட்ட மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பாராளுமன்ற நிலைக்குழு (சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்) கூட்டத்தில் பங்கேற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் MP அவர்கள் கேரளா ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். மருத்துவ கழிவுகளை தமிழ்நாடு எல்லையோர மாவட்டங்களில் கொட்டுவதை தவிர்க்கவும் போன்ற பல்வேறு கோரிக்கை இடம்பெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (17/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சிவா (9003448017), திருச்செங்கோடு – மலர்விழி (9498109579), வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
பள்ளிபாளையம் நகராட்சியுடன் எலந்தகுட்டை ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று பள்ளிபாளையம் சங்ககிரி பிரதான சாலை வெப்படை நான்கு ரோடு பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திமுக நாமக்கல் கிழக்கு நகர இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசனின் தந்தை ஆறுமுகம் மறைவையொட்டி எம்பி ராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அவருடைய இல்லத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தினர். நிகழ்வின்போது துணை மேயர் பூபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வெள்ளை உடையணிந்து இருந்த வள்ளுவரை, ஆளுநர் ஆர்.என். ரவி காவி உடையை மாற்றியதை கண்டித்து, நாமக்கல்லில், ஆளுநருக்கு காவி உடையை, அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் காந்தியவாதி ரமேஷ், அனுப்பினார். நாமக்கல் தலைமை அஞ்சலகம் மூலம், தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இனி தமிழக ஆளுநர் ஆர் அன் ரவி காவி உடை அணிய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
பொங்கல் பண்டிகையொட்டி நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. நாமக்கல் ஆட்சியர் உமா, பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், மாதேஸ்வரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று போட்டியை தொடங்கி வைக்க உள்ளனர். இதில் 700 காளைகள் 400 மாடுபிடி வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறுபவர்களுக்கு பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை பாதுகாத்திட முயற்சிகள் மேற்கொண்டு வரும் செயல்பாட்டாளர்கள், பொதுமக்கள் தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் நீர்நிலை பாதுகாவலர்கள் விருது விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன. இதில் ஒரு லட்சம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படுகிறது. இன்று கடைசி நாள் (17/1/2025). <
முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.4.80 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைத்து ரூ.4.60ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று மாலை அறிவித்துள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வருகிறது. விற்பனை மற்றும் நுகர்வு குறைந்துள்ளதாலும், பிற மண்டலங்களிலும் முட்டை விலை குறைந்து வருவதுமே விலை குறைப்புக்கு காரணம் என கூறினர்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தை மாத வெள்ளிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு,சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது மகா தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் காலை 10:30 மணி அளவில் பலவித வாசனை திரவியம் கொண்ட அபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபம் காண்பிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.