India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (24/1/2025) நடைபெற இருக்கிறது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் வரும் வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு, கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு 04286 222260-ல் தொடர்பு கொள்ளலாம். இதை SHARE செய்யவும்!
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று தற்போது கூடுதலாக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 33 நீர்நிலைகளிலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 21 நீர்நிலைகளிலும் மொத்தம் 54 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அரசிதழ் வெளியிடப்பட்டு மொத்தம் 170 நீர்நிலைகளில் வண்டல்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் 20-ஆம் தேதி இன்று நாமக்கல்லில் நடைபெற்றது இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக உயர்ந்த செய்யப்பட்டது. மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல்லில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு நேற்று முட்டைகளை ஏற்றிக் கொண்டு, நாமக்கல் – திருச்சி சாலை வழியாக சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற பேருந்து மீது மோதாமல் இருக்க, ஓட்டுநர் வாகனத்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை மாற்றியமைத்து உடைந்த முட்டைகளை அகற்றி சாலையை சீர்படுத்தினர்.
நாமக்கல்: திருச்செங்கோடில் பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பேற்பு விழா திருச்செங்கோடு, கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது, கடந்த 3 ஆண்டுகளாக தென்னிந்தியாவில் கல்வித் தரத்தில் பின்தங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. ஐஏஎஸ் தேர்வில் தமிழக மாணவா்கள் பின்தங்கியுள்ளனா். அவா்களை அடுத்த கட்டத்துக்கு அரசு தயார்படுத்தவில்லை என்றார்.
நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ஓ.என்.ஜி.சி.யின் மும்பை உயர் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆலைக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் கடந்த ஜன.10, தேதி அன்று பங்கேற்றார். இந்த நிகழ்வினை எம்.பி ராஜேஷ்குமார் தனது முகநூல் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் 19ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்: நாமக்கல் 2.00 மிமீ, புதுச்சத்திரம் 2.00 மிமீ சேந்தமங்கலம் 1.00 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5.00 மிமீ பதிவாகியுள்ளது என நாமக்கல் மாவட்டம் நிர்வாகம் இன்று 19ஆம் தேதி காலை வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.98க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.83க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.