India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கம்பி வேலி மீது கை வைத்ததில் இளஞ்சியத்தை மின்சாரம் தாக்கியது. அடுத்தடுத்து ஐவி மற்றும் சுஜீத் மீது மின்சாரம் தாக்கியது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்குக் அனுப்பிவைத்தனர். அங்கு மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா தலைமையில் இன்று (ஏப்.07) தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை <
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 425 காசுக்கு விற்ற முட்டை விலையை 10 காசு உயர்த்தி, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை தொடர முடிவு செய்யப்பட்டது .
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 6) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.
இராசிபுரம் அண்ணா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியராக பணியாற்றியவர் மு.ரா என்கிற மு.ராமசாமி. இவர், கம்பர் குறித்தும் கம்பராமாயணம் குறித்தும் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார், தற்போது இவருக்கு தமிழக ஆளுநர் R.N.ரவி விருது வழங்கி கௌரவித்து உள்ளார், இந்நிகழ்வு சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று (ஏப்.5) நடைபெற்ற ‘கம்பசித்திர விழாவில்’ பல கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஐடி துறையில் வேலைக்காக அதிக அளவில் இளைஞர்கள் சென்னைக்கு படையெடுத்து வரும் நிலையில், தற்போது நாமக்கல்லில் மினி டைட்டல் பார்க் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த டைட்டில் பார்க்கின் கட்டட வரைபடம் வடிவமைப்பு முடிந்துள்ளது. இந்தக் கட்டடத்தை அமைப்பதற்கான டெண்டர் அரசால் விரைவில் கோரப்படும். ஐடி படித்த நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் 2025-26-ம் நிதியாண்டிற்கு செலுத்த வேண்டிய சொத்துவரி தொகையினை வருகிற 30-ந் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில் 5 சதவீதம் முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி செய்யப்படும் என நாமக்கல் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 89.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 69.8 டிகிரியாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்க ஏரியால மழை பெய்தால் கமெண்ட் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.