Namakkal

News February 3, 2025

நாமக்கல்: மணமக்களை வாழ்த்திய துணை முதலமைச்சர்!

image

திமுக நாமக்கல் கிழக்கு மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம் பொன்னேரியைச் சேர்ந்த வழக்கறிஞர் S.தணிகை செல்வம் – வழக்கறிஞர் E.நந்தினியின் திருமணத்தை குறிஞ்சி இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எம் பி ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

News February 3, 2025

ரம்மியால் தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்

image

குமாரபாளையம் அருகே காந்தி நகர், சடையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் தமிழ்மணி லாரி ஓட்டுநர். மொபைல் போனில் ரம்மி ஆடும் பழக்கத்தால் 70 லட்சத்தை இழந்து விட்டதால் அதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News February 3, 2025

நாமக்கல்லில் இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக குறைந்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.100-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News February 3, 2025

மோகனூர் அருகே விபத்து: தந்தை, மகள் பலி 

image

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விபத்தில் சந்தை சிவசுப்பிரமணியம், மகள் ஸ்ரீநிதி ஆகியோர் உயிரிழந்தனர். இதில் அவரது மகன் படுகாயம் அடைந்தார். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் சரவணனை, போலீசார் கைது செய்தனர். 

News February 3, 2025

70 லட்சம் இழப்பு: லாரி ஓட்டுநர் தற்கொலை

image

குமாரபாளையம், காந்தி நகர் பகுதியில் உள்ள லாரி ஓட்டுநர் தமிழ்மணி நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரிடம் உள்ள போனில், ‘என் சாவுக்கு காரணம், நித்தியபிரகாஷ், பாலாஜி, விஜயகுமார். ரம்மி விளையாட்டில் 70 லட்சம் வரை விட்டு விட்டேன், எனக்கு சாவதை தவிர வேறு வழி இல்லை’ என்று வீடியோ பதிவு செய்து இருந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 2, 2025

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து அலுவலர்களின் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (02/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – குமார் (9080709435), ராசிபுரம் – குணசீலன் (9498120852), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 2, 2025

குற்றப்பிரிவு- சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்!

image

குற்றப்புலனாய்வுத் துறை சரகங்களுக்கு விருப்பமுள்ள சட்ட ஆலோசகர்கள் விண்ணப்பிக்கலாம்;ஆலோசகர் காலியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் 5 சட்ட ஆலோசகர்களை நியமிக்க குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை திட்டம். விருப்பமுள்ளவர்கள் www.tnpolice.gov.in தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News February 2, 2025

ரம்மியில் பணம் இழப்பு: வீபரீத முடிவு

image

நாமக்கல்லில் ரம்மியில் பணம் இழப்பு ஏற்பட்டதால், ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல், சடையம்பாளையம் காந்திநகரைச் சேர்ந்த லாரி டிரைவர் தமிழ்மணி(40) ஆன்லைன் ரம்மியில் ரூ.70 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இதில் வேதனை அடைந்த அவர் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். (தற்கொலை தீர்வு இல்லை)

News February 2, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 ஆகவே நீடித்து விற்பனை செய்யப்பட்டது.

News February 2, 2025

நாமக்கல்: செல்லப்பம்பட்டியில் பேருந்து விபத்து

image

ஹைதராபாத் – மதுரை ‘KALLADA’ தனியார் பேருந்து சேலம் பைபாஸ் செல்லப்பம்பட்டி அருகே விபத்துக்குள்ளானது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதில் 2 பயனிகளுக்கு நெற்றி மற்றும் மூக்கில் காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து காயமடைந்த இருவரையும் நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், பேருந்து ஓட்டுநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!