Namakkal

News February 5, 2025

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜகவினர் கைது

image

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு வழிகளில் மதுரை திருப்பரங்குன்றத்திற்கு செல்ல முயன்ற பாஜகவினர் சேந்தமங்கலம், ராசிபுரம், குமாரபாளையம், பள்ளிபாளையம், நாமக்கல் ஆகிய பகுதிகளிலிருந்து கார் மூலம் சென்றபோது ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். இவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் போலீசார் வைத்திருந்து மாலையில் விடுவித்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளLு..

News February 5, 2025

பிளஸ் 2 செய்முறை தேர்வு: பிப்ரவரி 7-ல் தொடக்கம்

image

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச் 3 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதற்கான செய்முறைத் தோ்வுகள் வரும் 7.2.2025 தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 148 மையங்களில் செய்முறைத் தோ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் நேற்று தேர்வு முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

News February 4, 2025

நாமக்கல்லில் முட்டை விலை தொடர்ந்து சரிவு

image

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.85- ஆக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 20 காசுகள் குறைந்து ரூ.4.65 ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த 3 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 40 காசுகள் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News February 4, 2025

செட்டிகுட்டைமேடு பேருந்து மோதி ஒருவர் பலி

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியத்தை சேர்ந்த செட்டிகுட்டை மேடு பகுதியில் தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது சம்பவ இடத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

News February 4, 2025

நாமக்கலில் இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

நாமக்கலில் தினமும் இரவு ரோந்து பணிக்காக எஸ் பி அவர்களால் நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (04/02/2025) செவ்வாய்க்கிழமை ரோந்து காவலர்கள் பட்டியல் நாமக்கல் வெங்கடாசலம் 9445492164, ராசிபுரம் பகுதியில் சுகவனம் 9498174815, திருச்செங்கோடு பகுதியில் சதீஷ்குமார் 9498103997, வேலூர் பகுதியில் சீனிவாசன் 9498176551 இரவு எஸ் பியால் நியமிக்கப்படுகின்றனர்.

News February 4, 2025

முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.3 சரிவு

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77 ஆக குறைந்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News February 4, 2025

நாமக்கல் சந்தையில் இன்றைய விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய (4-2-2025) காய்கறிகள் விலை நிலவரம்: (கிலோ 1-க்கு) கத்தரி ரூ 18-20, தக்காளி – ரூ.20 – 24, வெண்டைக்காய் ரூ.36, அவரைக்காய் ரூ.50-55-60, கொத்தவரை ரூ.50 முருங்கை ரூ.120, முள்ளங்கி ரூ.18, புடலங்காய் ரூ.28- 32, பாகற்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.50, நீர்பூசணி ரூ.22, பரங்கி ரூ.18, தேங்காய் ரூ.58 என விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

News February 3, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (03/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதபிறவி (9498167158), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – அர்ஜீனகுமார் (9629447739) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 3, 2025

முதலமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்பி

image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என் ராஜேஷ்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இன்று சென்னையில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்வினை தனது முகநூல் பக்கத்தில் எம்.பி. ராஜேஷ்குமார் பகிர்ந்துள்ளார்.

News February 3, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று தங்க கவச அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இந்நிகழ்வில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டுச் சென்றனர்.

error: Content is protected !!