India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி பகுதியில் உள்ள KSR மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை “நானோ தொழில்நுட்பம் மற்றும் பொருள் அறிவியல்” என்ற சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பேராசிரியர் என்.விஜயன் கலந்து கொண்டார்.
UGC நெறிமுறைகள் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி. ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். அவருடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் ரயில் நிலைய நுழைவு வாயில் பகுதியில் கனரக வாகனங்களை கொண்டு நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ள காரணத்தினால் ரயில் பயணிகள் ரயில் வரும் நேரத்திற்கு முன்பாகவே வருகை புரிந்து தங்களது பயணங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை சற்றே பொறுத்துக்கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மல்லசமுத்திரம் அருகே கொளங்கொண்டை கிராமம், விலாங்காடு பகுதியை சோ்ந்தவா் சித்ரா (50). இவரது பக்கத்து தோட்டத்தை சோ்ந்தவா் விவசாயி கோபால் (39). இவா்கள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்த வந்த நிலையில், இவா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சித்ராவை கோபால் தாக்கினாா். இதில் காயமடைந்த சித்ரா திருச்செங்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில், மல்லசமுத்திரம் போலீசார் கோபாலை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (6/2/2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை:
1) கெட்டிமேடு துணை மின் நிலையம்
2) ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகள்
3) சமயசங்கிலி துணை மின் நிலையம்
4) தூசுர் சுற்றுவட்டாரப் பகுதிகள்
இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், இந்தியா முழுவதும் நெடுங்சாலையில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். வாகன இன்சூரன்ஸ் பிரிமியத்திற்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், காவிரி-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (05/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – சவீதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் வள்ளலார் சன்மார்க்க அறக்கட்டளை சார்பில் மூன்றாம் ஆண்டு ஏழு திரை நீக்கி போதி தரிசன விழா நடைபெற உள்ளது. வருகிற பதினோராம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி முதல் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 11 மணிக்கு தலை இளமணி மாகன்யா ஸ்ரீயின் திருவருட்பா இசைக்கச்சேரியும் பசியாற்றுதல் பெருவிழா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், தோக்கவாடி பகுதியில் உள்ள KSR கலை மற்றும் அறிவியல் கல்லூரி உயிர்வேதியியல் மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலையோர கழிவுநீர் திட்டத்தில் மழைநீர் கலப்பதால் ஏற்படும் மாசுபாட்டை தடுப்பது குறித்த வழிகாட்டலில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், எக்செல் மருத்துவக் கல்லூரியின் மாணவி மனிஷா NOBEL WORLD Record ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நெற்றியில் ஒரு கப் தண்ணீரை வைத்துக்கொண்டு 150 வினாடிகள் கோப்ரா போஸ் (புஜங்கசனம்) முயற்சியில் சாதனை படைத்தார். சாதனை படைத்த மாணவிக்கு கல்லூரியின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.