Namakkal

News February 14, 2025

நாமக்கல்லில் மக்கள் சிந்தனை அரங்கம்

image

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு நாமக்கல் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புத்தகம் பேசுகிறது மக்கள் சிந்தனை அரங்கம் வரும் 27ந் வியாழக்கிழமை காலை நாமக்கல் மோகனூர் சாலைநாமக்கல் மாவட்ட போட்டித்தேர்வு நூலக பயிற்சி மையம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது.

News February 14, 2025

ஆஞ்சநேயர் கோவிலில் பக்தர்கள் ரூ.58.26 லட்சம் காணிக்கை

image

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நேற்று திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவல் குழுவினர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் உள்ள காணிக்கைகள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் எண்ணப்பட்டன. அந்த உண்டியல்களில் ரூ.58 லட்சத்து 26 ஆயிரத்து 592 ரொக்கம், 43 கிராம் தங்கம், 222 கிராம் வெள்ளி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 73 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <>விண்ணப்பிக்க வேண்டும்.<<>> ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பனி குளிர் வெய்யில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆகவே நீடிக்கிறது.

News February 13, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (13/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 13, 2025

மக்களுடன் முதல்வர் முகாம்: ஆட்சியர் அறிவிப்பு

image

நாமக்கல் மற்றும் ராசிபுரம் தொகுதி பகுதிகளில், மக்களுடன் முதல்வர் முகாம் பகுதி 3, வரும் வெள்ளிக்கிழமை (21/2/2025) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றன. எனவே, பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

image

நாமக்கலில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் ஆசிரியர் செல்வக்குமார் (52) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இப்பள்ளியில் பணியாற்றும் 3 மாணவிகளை கொல்லிமலை அழைத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்

News February 13, 2025

விவசாயிகளுக்கு தனிக்குறியீடு எண் வழங்க ஏற்பாடு

image

அனைத்து கிராமங்களிலும் உள்ள பஞ்சாயத்து அலுவலகம், சமுதாய கூடங்களில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில்,நில விபரங்களுடன், விவசாயிகளின் விபரம் மற்றும் நில உடமை வாரியான விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிக்கும் தனிக்குறியீடு எண் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

நாளை “உங்களைத்தேடி உங்கள்‌ஊரில் ” மனுக்கள் பெறும் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் அரசின் திட்டங்கள் கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டுவரும் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ முகாம் வரும் 19.02.2025 நடைபெற உள்ள நிலையில், நாளை 13.02.2025 நாமக்கல், கீரம்பூர் நல்லிபாளையம் புதுச்சத்திரம் செல்லப்பம்பட்டி இடங்களில் வருவாய் அலுவலர் அலுவலகங்களில் முன்மனுக்கள் பெறப்பட உள்ளது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!