India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்கள் படைப்பணியின் போது உயிர் இழந்த படைவீரர்களின் விதவையர்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் பெறலாம். இது தொடர்பாக வரும் 20ஆம் தேதி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் 55 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்கு கூட்டம் நாமக்கல்லில் இன்று 17ந் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 4.65 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ4.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை குறைந்ததாக கூறப்படுகிறது
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி, இன்று (17/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜன் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695), வேலூர் – சவிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராம ஊராட்சிகளில் 3-ஆம் கட்டமாக, மக்களுடன் முதல்வர் முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 21.02.25 முதல் 13.03.25 வரை நாமக்கல் மாவட்டத்தில் 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை முத்துக்காளிப்பட்டி, கார்கூடல்பட்டி, திருமலைப்பட்டி, வீசாணம், மங்களபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செங்கோடு மாசிக்குண்டம் திருவிழா மாசி 16 பூச்சாட்டுதலுடன் நடைபெற உள்ளது. மாசி 27 இல் நடைபெறும் மகா குண்டம் இறங்கும் விழாவில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி , குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய்நொடிகள் தீரவும் , கடன் தீரவும் நேர்த்தி கடன் செலுத்துவதாக வேண்டி குண்டம் இறங்கினால் அனைத்தும் நிறைவேறும் எனவே தெரியாத மக்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் மக்களே
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. தமிழ் மாத மாசி முதல் திங்கள்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்டஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றன பின்தங்ககவச அலங்காரத்தில் காட்சி தந்தார். இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சிநேயரை வழிபட்டனர்.
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
நாமக்கல் அடுத்த தூசூர் சேர்ந்த மூதாட்டி காமாட்சி ( 65). இவர் அதிகாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் அவரை மாட்டு கொட்டகைக்கு இழுத்து சென்று 5பவுன் தங்க சங்கிலியை பறித்து ஓடியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த ஒரு டீக்கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென மர்ம பொருள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை செய்ததில், கடையில் இருந்த கேஸ் சிலிண்டரின் லப்பர் குழாயில் ஏற்பட்ட கசிவின் மூலமாக கேஸ் வெளியேறி, கடையில் இருந்த குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்சார கசிவு மூலமாக வெடி விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (16/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.