India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே தமிழ்நாடு வனத்துறையின் கீழ் முதுமலை புலிகள் காப்பகத்தில் காலியாக உள்ள 9 யானை காவடி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் பேச தெரித்திருந்தால் போதுமானது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க

தவெக சார்பில் நேற்று முன் தினம் நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட 4 மணி நேரம் தாமதமாக விஜய் வந்ததால், அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், நாமக்கல் மாவட்டச் செயலர் சதீஷ் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக கூட்டம் நடத்துதல், பாதுகாப்புக்கு தொந்தரவு ஆகிய பிரிவுகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்!

நாமக்கல் மக்களே தமிழ்நாடு அரசின் TN Rights திட்டத்தின் கீழ், 1,096 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.12,000 முதல் ரூ.35,000 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள 2,861 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <

நாமக்கல்: எருமப்பட்டி யூனியனில் உள்ள போடிநாய்க்கன்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சிவக்குமார் (36), நேற்று முன்தினம் இரவு சாக் கடை கால்வாய் திண்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 10 அடி ஆழமுள்ள சாக்கடையில் விழுந்து உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த எருமப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல்: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (50) என்பவரின் நுாற்பாலையில் நேற்று இரவு தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் ₹5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது. மேலும் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின்வாரியத்தினர் இணைப்புகளை சீரமைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள திம்மநாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன்(58). தொழிலாளியான இவர், தனது பைக்கில் வேப்பிலைபட்டிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே சைக்கிளில் சென்ற முதியவர் ராமன்(70) என்பவர் மீது அவர் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 28) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. நாளை (செப்டம்பர் 29) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.28 நாமக்கல் – (தேசிங்கன் -8668105073) ,வேலூர் – ( ரவி -9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி -9498169110), திம்மநாயக்கன்பட்டி -(ரவி- 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.