India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இராசிபுரம் சட்டமன்ற தொகுதி, அத்தனூர் பேரூரை சார்ந்த மெய்யழகன் அவர்களின் மகனும் வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவனுமாகிய சுஜய் நிவாஷ் பள்ளிகல்வி துறை சார்பாக 2023-24ம் ஆண்டில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் ஒவியப்போட்டியில் மாநிலத்தில் முதலிடத்தை பெற்று மலேசியா நாட்டிற்கு சுற்றுலா செல்லவுள்ளார். அம்மாணவனை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்பி ராஜேஷ்குமார் வாழ்த்தினார்கள்.
பாஜக நாமக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நாளை மதியம் 2 மணிக்கு நாமக்கல் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் இராமலிங்கம் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. மாசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது. காலை 10:30 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால் தயிர் மஞ்சள் சந்தனம் எனஅபிஷேகம் மிக விமரிசையாக நடைபெற்றது. பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார், இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளாமானவர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர்.
குமாரபாளையம் அருகே கல்லாங்காடு வலசு பெத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து லாரி ஓட்டுநர். வீட்டில் வசிக்கும் ரமேஷ் என்பவரிடம் உங்களுடைய சாக்கடைகளை நீர் தனது வீட்டிற்கு வருவதாக கூறி நேற்றிரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷ் மற்றும் அவருடைய தந்தை ஆறுமுகம் தாக்கியதில் அங்கமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இராசிபுரத்தில் பல்வேறு இடங்களில் சந்து கடைகளில் மது மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன். இந்த நிலையில் அண்மையில் புதிய பேருந்து நிலையம் அருகே வார்டு செயலாளருக்கும் நகர மன்ற உறுப்பினருக்கும் மாமூல் வழங்க கோரி வாக்குவாதம் ஏற்பட்டது. மாமூல் கொடுக்காததால் சந்து கடையில் லாட்டரி சீட்டு விற்கப்படுவதை வீடியோ வெளியிட்டதைத் தொடர்ந்து கவுன்சிலர் வீட்டிற்கு சென்று அவரிடம் கேட்டதில் அடிஉதை ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் அன்னை கொள்முதல் விலை ரூ 4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பனி குளிர் வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்தது இருப்பினும் முட்டையின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.65 ஆக நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்துகாளிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகாம் தொடக்க விழா நாளை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற உள்ள இந்த முகாமில், பாராளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அட்மா குழு தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அஞ்சல் துறையில் இருக்கும் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் 73 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி மார்ச் (3.3.2025). விண்ணப்பிக்க <
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் வரும் (21.02.2025) அன்று 11 மணிக்கு நடைபெற உள்ளதால், விவசாயிகள் & சங்கப்பிரதிநிதிகள் தங்கள் பயிர் சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் இருப்பு விவரங்கள் மற்றும் மானியத்திட்டங்கள் அறிந்துகொள்வதுடன் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் உமா அறிக்கை.
Sorry, no posts matched your criteria.