Namakkal

News July 7, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன ரோந்து போலீசார் விபரம் !

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 6 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல்- ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி (9443833538) ராசிபுரம் – ( 9498169110), பள்ளிபாளையம்- ( 9498110876), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – கலைச்செல்வன் ( 9952424705), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர் .

News July 6, 2025

நாமக்கல் இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று (ஜூலை 6) நாமக்கல்- கபிலன் ( 9711043610), ராசிபுரம்- அம்பிகா ( 9498106528), திருச்செங்கோடு தவமணி – (9443736199), வேலூர் – தேவி ( 9842788031), ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News July 6, 2025

நாமக்கலிலுள்ள பழமை வாய்ந்த கோயில்கள்!

image

▶️ நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்
▶️ நாமக்கல் நரசிம்மர் கோயில்
▶️ திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில்
▶️ கொல்லிமலை மாசி பெரியண்ணன் சாமி கோயில்
▶️ காளிப்பட்டி கந்தசாமி கோயில்
▶️ திருச்செங்கோடு சின்ன ஓங்காளிம்மன் கோயில்
▶️ கொக்கராயன்பேட்டை பிரம்மலிங்கேஸ்வரர் கோயில்
▶️ ராசிபுரம் கைலாசநாதர் கோயில்.
நாமக்கல் மக்களே SHARE பண்ணுங்க. வேறு கோயில்கள் இருந்தால் கமெண்டில் தெரிவிக்கவும்!

News July 6, 2025

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E/B.Tech முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க!

News July 6, 2025

நாமக்கல்லில் இன்றைய கறிக்கோழி விலை

image

நாமக்கல்லில் தினமும் நடைபெறும் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்கோழி மற்றும் முட்டைக்கோழி விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில், முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.106 ஆகவும், கறிக்கோழி ஒரு கிலோ ரூ.97 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

News July 6, 2025

நாமக்கல் : போலி ஆர்.டி.ஓ பெண்ணுக்கு போலீஸ் கஸ்டடி

image

திருச்செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தநவீன்குமார்(29) என்பவரை தன்வர்த்தினி கோட்டாட்சியர் என ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக தன்வர்த்தினியை ஜூன்.26ல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். போலி அடையாள அட்டை, அரசு நியமன உத்தரவு ஆகியவற்றை தயாரித்து மோசடி செய்தது அம்பலமானது. இது போல் வேறு மோசடியில் ஈடுபட்டாரா என விசாரிக்க அவரை போலீஸ் கஸ்டடி எடுக்க முடிவு செய்யப்ட்டுள்ளது.

News July 6, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜூலை 5 ஆம் தேதி இரவு, 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்: நாமக்கல் பாலசுப்ரமணியம் ( 944 2851418) வேலூர்- சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம்- பாலசுப்ரமணியம் ( 9498168505), திருச்செங்கோடு வெங்கடாச்சலம் ( 9498169150), திம்மநாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073) , குமாரபாளையம் – மணிகண்டன் ( 9498168984), ஆகியோர் இரவு இரவு வாகன ரோந்து பணியில் உள்ளனர்.

News July 5, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். இன்று (ஜூலை 5) நாமக்கல்- வேதபிறவி ( 9498167158) ராசிபுரம்- சுகவானம் ( 9498174815) திருச்செங்கோடு – மகாலட்சுமி ( 7708049200) வேலூர் – மனோகரன் ( 9952376488) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்

News July 5, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் இன்று (ஜூலை 5) நாமக்கல்லில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.75 ஆகவே நீடிக்கிறது.

News July 5, 2025

நாமக்கல்லில் பூர்வஜன்ம பாவம் நீக்கும் கோயில்!

image

நாமக்கல்: கொக்கராயன்பேட்டையில் பிரம்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலில் உள்ள ஈசன் சுயம்புவாகத் தோன்றியவர். பிரம்மதேவர் வழிபட்டதால், இறைவன் பிரம்ம லிங்கேஸ்வரர் என்னும் திருப்பெயர் கொண்டார். இவரை தரிசித்து வழிபட்டால், முன்ஜன்ம பாவங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இத்தலத்தின் மகிமையை உணர்ந்த முதலாம் ஆதித்த சோழன், கோயிலுக்கு திருப்பணிகள் செய்திருப்பதாக சொல்கிறார்கள்.

error: Content is protected !!