Namakkal

News February 22, 2025

தங்க கவச அலங்காரத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத சனிக்கிழமை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News February 22, 2025

நாமக்கல்: கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி (உயிருடன்) கிலோ ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று நடைபெற்ற, கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.96 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் முட்டைக்கோழி ரூ.77-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.

News February 22, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 3 நாட்களுக்கு மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அதேபோல் 25 (ம) 26-ந் தேதிகளில் மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 22, 2025

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு வரவேற்பு

image

நாமக்கல் நகரப்பகுதி முழுவதும் இன்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பயணியர் மாளிகையில், நாமக்கல் பாஜக உறுப்பினர்கள், அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும், சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், இவர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் இதர நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

News February 22, 2025

நாமக்கல்: முட்டை விலை 10 காசுகள் உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் 465 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக அதிகரித்துள்ளது. முட்டை விலை உயர்ந்துள்ளதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News February 22, 2025

My v3ads-ல் முதலீடு செய்தவரா நீங்கள்?

image

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, நாமக்கல் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

News February 22, 2025

போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண் கைது

image

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரவு காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அப்போது, பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு சொகுசு பேருந்து சென்றது. அதனை வழிமறித்து காவல் துறையினர் பரிசோதனை செய்ததில், பெங்களூரில் இருந்து திருநெல்வேலிக்கு 39 கிலோ போதைப் பொருள்கள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து போதை போர்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

News February 21, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (21/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 21, 2025

குடிநீர் குழாய் உதிரி பாகங்களை திருடியர் கைது

image

நாமக்கல்: குமராபாளையம் , பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் உள்ள வீடுகளில், தண்ணீர் குழாயில் உள்ள பித்தளை வால்வுகளை, இரவு நேரங்களில் மர்ம நபர்கள் திருடிவந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், குமராபாளையம் போலீஸார் விசாரணை நடத்தியதில், ஒட்டமெத்தை பகுதியில் உள்ள நவீன் ராஜ் என்பவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள வால்வுகளை மீட்டு, அந்த நபரை கைது செய்தனர்.

News February 21, 2025

நாமக்கல்: வேலைவாய்ப்பு முகாம்

image

பாச்சலில் வருகின்ற 01/03/25 காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசின் மாநில, ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் இம்முகாம் ஏ.கே. சமுத்திரத்தில் உள்ள ஞானமணி கல்வி நிறுவனத்தில் நடைபெறும். இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணி இடங்களை நிரப்ப உள்ளன. அனுமதி இலவசம்.

error: Content is protected !!