India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல், ராசிபுரம் சிவானந்தா சாலை மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவன் கவின்ராஜ் (14), என்பவர் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்தி வேலூர் அருகே ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் கீதா ராணி. இவர் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் வெளியூருக்கு சென்று நேற்று வீடு திரும்பினார். பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகை திருட்டு போயின. அதிர்ச்சி அடைந்த கீதா ராணி பரமத்தி போலீசார்க்கு தகவல் கொடுத்தார். அதனை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சுகவானம் (9498174815), திருச்செங்கோடு – தவமணி (9443736199), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல்லிலிருந்து நாளை (பிப்.26) முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும் (20671), மாலை 5:25 மணிக்கு நாமக்கல்லிலிருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல பெங்களூரூ-மதுரை வந்தேபாரத் ரயிலிலும் (20672) டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்யலாம்.
பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும்.<
பெரியகோம்பை பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் மண் அள்ளுவதாக வருவாய்த்துறையினருக்கு புகார் சென்றது. இதையடுத்து, ஆர்.ஐ., புஷ்பா தலைமையில் வருவாய்த்துறையினர், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, மண் அள்ளி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அனுமதியின்றி மண் அள்ளி வந்தது தெரிந்தது. இதையடுத்து, டிப்பர் லாரி மற்றும் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் கைது.
நாமக்கல்லில் உண்மைக்கு புறம்பாக கையெழுத்து பெற்ற நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடவத்தூரை சேர்ந்த பெரியசாமி நாமக்கல் எஸ்பியிடம் மனு அளித்தார். சிலை கடத்தலில் ஈடுபட்டவர்கள்களை காப்பாற்ற என்னை மிரட்டி, நீங்கள் தொடர்ந்து கோயிலில் வேலை செய்ய வேண்டும் என்றால் இந்த லெட்டரில் கையெழுத்து போட சொல்லி சிக்க வைப்பதாக பெரியசாமி மனுவில் கூறியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – மலர்விழி (9498109579), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 24ஆம் தேதி நடைபெற்றது இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 4.90 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது வெயில் குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதனிடையே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.90 என்ற அளவில் நீடிக்கிறது
நாமக்கல் பரமத்தி ரோட்டில் உள்ள NTC ஓட்டுநர் பயிற்சி மையம் செயல்படுகிறது இந்த பயிற்சி மையத்தில் இலவசமாக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி இலவசம் அளிக்கப்படுகிறது இலவச
பயிற்சி வகுப்புடன் ஹெவி லைசன்ஸ் இலவசமாக எடுத்து தரப்படும் எனவும் நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதல் விவரங்களுக்கு
73598 24694, 98434 69499 என்ற எண்ணிகளில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்
Sorry, no posts matched your criteria.