India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராசிபுரம் அரசு பள்ளியில் படித்து வந்த 9ம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் புதன்கிழமை பள்ளி வளாகத்தில் கழிவறையில் சக மாணவரால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார். இதனையடுத்து அதே பள்ளியை சேர்ந்த மாணவர் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார். தகராறு நடந்ததையும் அவரை தாக்கியதையும் மாணவர் ஒப்புக்கொண்டார். இதனிடையே பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நேரில் விசாரணை நடத்தினார்.
நாமக்கல் மாவட்ட பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பங்குபெரும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
நாமக்கல் கமலாலயக் குளத்தில் தெப்ப உற்சவ விழாவை நடத்த வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், நாமக்கல்லில் 100 ஆண்டுகளுக்கு பிறகு நாமக்கல் நரசிம்மர், நாமகிரி தாயாா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் தெப்ப உற்சவ விழா மார்ச் 12-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் போலீஸ் அக்கா திட்ட மூலம் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்கும் வகையில் முத்தாயம்மாள் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் முத்தாயம்மாள் பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூஷன், கலைமகள் B.Ed கல்லூரி நாமகிரிப்பேட்டை, ஆகிய கல்லூரி மாணவிகள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றால் உடனடியாக தொடர்புகொள்ள மேலே உள்ள QR CODE ஐ ஸ்கேன் செய்யவும்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (27/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – ஆகாஷ் ஜோஷி (9711043610), ராசிபுரம் – விஜயகுமார் (9498104763), திருச்செங்கோடு ,வேலூர் – சுரேஷ்குமார் (9498168363) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத வியாழக்கிழமை அம்மாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், முத்தங்கி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
‘பசுமை சாம்பியன்’ விருதுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். தகுதியானவர்கள் விண்ணப்பத்தினை www.tnpch.gov.in இணையத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 2 பிரதிகள் மற்றும் சி.டி பதிவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி (15/04/2025) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.தகவல் அறிந்து வந்த அமைச்சர் மதிவேந்தன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் உமா மாணவரின் பெற்றோர் உறவினருக்கு ஆறுதல் கூறி இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இருப்பினும் உடலை வாங்க மறுப்பதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்ட பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பங்குபெரும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 28/2/2025 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (26/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – கெங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.