Namakkal

News March 23, 2025

அதிகரிக்கும் வெப்பம்: நாமக்கல் கலெக்டர் அறிவுறுத்தல் 

image

நாமக்கல் மாவட்டத்தில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பகல் 12 மணி முதல் 3 மணிவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஆலோசனை தெரிவித்துள்ளார். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ். கலவை ஆகியவற்றை அருந்த வேண்டும் என்று கலெக்டர் ஆலோசனை கூறினார்.

News March 23, 2025

நாமக்கல்லில் விபத்து: ஒருவர் பலி

image

ராசிபுரம் அருகே உள்ள வி.ஐ.பி. நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). நேற்றிரவு ஆறுமுகம் ராசிபுரத்தில் இருந்து டூவீலரில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தார். அவர் ராசிபுரம் டவுன் சேலம் ரோட்டில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, சேலத்தில் இருந்து ராசிபுரத்திற்கு வந்த அரசு டவுன் பேருந்தும், டூவீலரும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 22, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (22/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999) ,வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 22, 2025

பாஜக மாவட்ட தலைவர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

image

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் திமுக அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் சரவணனின் இல்லம் முன்பாக நிர்வாகிகளுடன் கருப்புக்கொடி ஏந்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் பலருடன் இருந்தனர்.

News March 22, 2025

நாமக்கல்லில் இளம்பெண் விபரீத முடிவு

image

திருச்செங்கோடு அருகே சிறுமொளசியில் வசித்து வருபவர் முனுசாமி. இவருடைய இளைய மகள் செல்வி (17). கடந்த 2 ஆண்டுகளாக செல்வி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் குணமடையவில்லை. இதனால் செல்வி மனவேதனையில் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 22, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் பதிவு

image

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் (இணைய வழி மோசடி) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் தெரிவித்தாா். பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக 1930 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைப்பேசி திருட்டுகள் நடைபெற்றால் இணையத்தில் கைப்பேசி எண்ணை கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

News March 21, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (21/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 21, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கலில் இன்று 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.15 ஆகவே நீடிக்கிறது.

News March 21, 2025

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு!

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில், குரூப் 4 தேர்விற்கு பயிற்சி வகுப்பு மார்ச் 25ம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் 04286-222260 எண் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

News March 21, 2025

நாமக்கல்லில் அதிகாரிகள் மீன் கடைகளில் திடீர் ரெய்டு

image

நாமக்கல்லில் உள்ள பல்வேறு மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் . மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள மீன் சப்ளை செய்யும் கடைகள் உட்பட மொத்தம் 11 மீன்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

error: Content is protected !!