Namakkal

News August 14, 2025

நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – சின்னப்பன் ( 9498169092), திருச்செங்கோடு – சுப்ராயன் ( 9498169031), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .

News August 14, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கலில் இருந்து வரும் வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், இரவு 10:50 மணிக்கு 07332 காரைக்குடி – ஹூப்ளி ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, துமகூரு ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட் உள்ளன.

News August 13, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விபரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அலுவலர்கள் இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இன்று ( ஆகஸ்ட்.13 ) நாமக்கல் – யுவராஜன் (9498177803 ), ராசிபுரம் – சங்கரபாண்டியன் ( 9655230300), திருச்செங்கோடு – முருகேசன் ( 9498133890), வேலூர் – பொன்குமார் ( 6374802783) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News August 13, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்: இன்று (ஆகஸ்ட் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இருப்பினும், முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆகவே நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

தீரா கடன்களை தீர்க்கும் நாமக்கல் கோயில்!

image

நாமக்கல் அடுத்த அணியாபுரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. இதை, கடன் பிரச்சனையில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 13, 2025

நாமக்கல்: VOTER லிஸ்டில் பெயர் இருக்கா? CHECK NOW

image

நாமக்கல் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை (VOTER ID) டைப் செய்து கிளிக் செய்யவும். அதில், உங்கள் பெயர், ஊர், எந்த இடத்தில் நீங்க வாக்கு செலுத்த வேண்டும் என்ற அனைத்து விவரங்களும் நொடியில் தெரிந்துவிடும். உடனே CHECK பண்ணுங்க. இதை SHARE பண்ணுங்க.

News August 13, 2025

தங்க கவசத்தில் நாமக்கல் ஆஞ்சநேயர்!

image

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில், ஆடி மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 13) ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஆஞ்சநேயர் சுவாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News August 13, 2025

நாமக்கல் முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக இருந்து வந்த நிலையில், இதற்கிடையே நேற்று(ஆக.12) நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 490 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News August 13, 2025

நாமக்கல்: கறிக்கோழி விலை உயர்வு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று(ஆக.12) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக் கோழி விலை கிலோ ரூ.92 ஆக அதிகரித்து உள்ளது. அதன்படி, முட்டைக்கோழி கிலோ ரூ.107-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

News August 13, 2025

நாமக்கல்: கஞ்சா கடத்திய ஒடிசா இளைஞர்கள் கைது

image

நாமக்கல்: மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அஜய் ராவுத் (35 ), திலீப் குமாா் சேத்தி (28) ஆகிய இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். நீதிபதி ரங்கராஜன், பிடிபட்ட இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

error: Content is protected !!