Namakkal

News April 8, 2025

நாமக்கல்லில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்டவேலைவாய்ப்பு மையத்தில் “தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்” நடைபெறவுள்ளது. இதில் 8ஆம் வகுப்பு முதல் டிகிரி, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம். இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற போன் நம்பரை தொடர்பு கொள்ளலாம். இந்த அறிவிப்பினை மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News April 8, 2025

இ- பர்மிட் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் சேந்தமங்கலம்,மோகனூர், இராசிபுரம், திருச்செங்கோடு குமாரபாளையம் ஆகிய தாலுக்காக்களில் கிராவல், சாதாரண கற்கள், கிரானைட் குவார்ட்ஸ் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கான நடைச்சீட்டு (E-Permit) மற்றும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்கள் இணைய வழியாக விண்ணப்பிக்கப்பட வேண்டும் என  நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.உமா அறிவுறித்தியுள்ளார்.

News April 7, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.7 குறைவு!

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ (உயிருடன்) ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் இன்று (ஏப்.7) நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையில் ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஒரு கிலோ கறிக்கோழியின் விலை ரூ.89 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே முட்டைக்கோழி கிலோ ரூ.85- ஆகவும் அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

News April 7, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 7ம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது கோடை வெப்பம் முட்டை நுகர்வு என பல்வேறு காரணங்களால் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.35 ஆகவே இருக்கிறது.

News April 7, 2025

மின்சாரம் தாக்கி குழந்தைகள் உள்பட மூவர் பலி

image

மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கம்பி வேலி மீது கை வைத்ததில் இளஞ்சியத்தை மின்சாரம் தாக்கியது. அடுத்தடுத்து ஐவி மற்றும் சுஜீத் மீது மின்சாரம் தாக்கியது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்குக் அனுப்பிவைத்தனர். அங்கு மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

News April 7, 2025

நாமக்கல்: தேர் திருவிழா ஆய்வு கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.உமா தலைமையில் இன்று (ஏப்.07) தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்

News April 7, 2025

நாமக்கல் அங்கன்வாடியில் 127 காலிப்பணியிடம்

image

நாமக்கல் மாவட்டங்களில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 127 அங்கன்வாடி பணியாளர்கள், 5 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 12 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பங்களை <>www.icds.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணிகளுக்கு 23.04.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE பண்ணுங்க)

News April 7, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, 425 காசுக்கு விற்ற முட்டை விலையை 10 காசு உயர்த்தி, 435 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரு கிலோ 85 ரூபாய்க்கு விற்ற முட்டைக்கோழி விலையை, எவ்வித மாற்றமும் செய்யாமல், அதே விலை தொடர முடிவு செய்யப்பட்டது .

News April 6, 2025

நாமக்கல் : முட்டை விலை 10 பைசா உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் இன்று (எப் 6) மாலை நாமக்கல் மண்டல என்இசிசி தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முட்டை விலை மேலும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

News April 6, 2025

கோடையை இதமாக்கும் மண் பானை குடிநீர்!

image

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் தலைவலி, சளி, இருமல், தொண்டை வலி, மலச்சிக்கல் மற்றும் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதிலிருந்து விடுபட மண்பானையில் வைக்கப்படும் நீரை அருந்தலாம். இதன் மூலம் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுகள் ஜீரண சக்தியை அதிகரிக்கும் என மருத்துவர் தனபால் தெரிவித்துள்ளார். இதை ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!