India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோனூர் அருகே கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (50).இவர் கடந்த 25-ந் தேதி தனது டூவீலரில் கோனூர் கந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அவர் தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் நடராஜன் (9442242611), திருச்செங்கோடு -மகாலட்சுமி (7708049200), வேலூர்- ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டைக்கு ரூ.10 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று 26 ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.15 ஆக இருந்து, தற்போது பத்து காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (27-03-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த 20-ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீச்சல் பயிற்சி 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,416. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 8220310446 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கலில் இருந்து நாளை வெள்ளி காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, அர்சிகெரே, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:34 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளவும்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று, நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.7 உயர்த்த முடிவு செய்தனர் . எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.77 ஆக அதிகரித்து உள்ளது. அதேபோல் ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, கிலோவுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டு, ரூ.101-க்கு விற்பனையாகி வருகின்றது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் மட்டும் 500 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும் ஆன்லைன் டிரேடிங், இரட்டை பணம், உள்ளிட்டவற்றில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்” என எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.
கோடைகாலம் முன்னரே நாமக்கல்லில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தநிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.