India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல்: தங்க நகை தொழிலாளிகளிடம் தங்க துகல் கலந்த மண் எனக் கூறி, வெறும் மணலை ரூ.68 லட்சத்திற்கு விற்ற குஜராத்தைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கேரளாவில் நேற்று(மார்ச் 28) கைது செய்தனர். இதுகுறித்த விசாரணையில், தங்கம் செய்யும் தொழிற்சாலையிலிருந்து சேதமாகும் தங்கத் துகள்கள் கலந்த மண்ணை தாங்கள் எடுத்து வந்துள்ளதாகக் கூறி தொழிலாளிகளை இந்த குஜராத் கும்பல் ஏமாற்றியது தெரிய வந்தது.
நாமக்கல் நகர் மையப் பகுதியில், உலக புகழ் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பங்குனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10 மணிக்கு பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் கைலாசநாதர் என்றும் அன்னை அறம்வளர்த்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோயில் 1 அல்லது 2 ஆம் நூற்றாண்டில் வல்வில் ஓரி மன்னனால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்கு, கைலாசநாதரிடம் வேண்டிக்கொள்ள, கலைகளில் சிறப்பிடம் பெறலாம், அம்பாளை வணங்கிட புத்திரதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் 25 காசுகள் உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. 27ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.25 ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று நாமக்கல் – ஆகாஷ் ஜோசி ( 97110 43610), ராசிபுரம்- விஜயக்குமார் ( 94981 04763), திருச்செங்கோடு – கிருஷ்ணன் ( 94981 98444), மற்றும் வேலூர் – சங்கீதா ( 94982 10142) ஆகியோர் என்று நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடுவர்.
நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூலகத்தில் , அரசுப் பள்ளி அளவில் வேறு எங்குமே இல்லாத வகையில் 12,000 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு, பழங்காலம் முதல் தற்காலம் வரை பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள், தனித்தனி தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன. மேலும், மாணவர்கள் புத்தகம் வாசிப்பதற்காகவே நூலகத்துடன் இணைந்த சகல வசதிகளுடன் கூடிய வாசிப்பு அறையும் உள்ளது. SHARE IT!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டியில் இருந்து சாலையூருக்கு செல்லும் பிரதான சாலையில் வருகிற 19-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்காக அங்குள்ள சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. போட்டி நாளன்று 500 காளைகள் பங்கேற்க விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
நாமக்கல்லில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ▶️காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ▶️வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶️தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 19,342 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 92 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் 1,698 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட் டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி ரூ.101-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை செய்யப்படவில்லை.
Sorry, no posts matched your criteria.