Namakkal

News October 11, 2025

நாமக்கல்: டிகிரி போதும்.. கனரா வங்கியில் வேலை!

image

நாமக்கல் மக்களே, கனரா வங்கி (Canara Bank) 3500 அப்ரண்டிஸ் (Graduate Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000/- வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. நாளை 12.10.2025 கடைசி தேதியாகும். SHARE பண்ணுங்க!

News October 11, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு!

image

நாமக்கல், திருப்பதி வழியாக வாரந்திர ரயிலாக இயக்கப்பட்டு வரும் 16353/16354 நாகர்கோவில் – காச்சிகுடா (ஹைதராபாத்) – நாகர்கோவில் விரைவு ரயில் வரும் டிசம்பர்-13ம் தேதி முதல் நவீன LHB பெட்டிகளை கொண்டு இயங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாமக்கல்லில் இருந்து காட்பாடி, திருப்பதி, கடப்பா, கூட்டி, கர்னூல், மஹபூப்நகர், ஹைதராபாத் போன்ற பகுதிகளுக்கு சென்றுவர கூடுதல் இருக்கைகள் கிடைக்கும்.

News October 11, 2025

நாமக்கல்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

image

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)

News October 11, 2025

நாமக்கல்: ஆசிரியர் தேர்வு மையத்தில் சிசிடிவி!

image

நாமக்கல் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியா் தோ்வு நாளை(அக்.12) நடைபெறுவதையொட்டி, பாதுகாப்பு கருதி 30 மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் இத்தோ்வை 30 மையங்களில் 8,193 போ் எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 98 மாற்றுத்திறனாளிகள், 15 பாா்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் தோ்வு எழுதுகின்றனா்.

News October 11, 2025

நாமக்கல் கனரா வங்கியில் வேலை வேண்டுமா..?

image

நாமக்கல் மக்களே.., கனரா வங்கியில் காலியாக உள்ள 3500 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. வங்கிப் பணியைத் தொடங்க பட்டதாரிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு இது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே(அக்.12) கடைசி நாள். உடனே விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக். இதை உடனே அனைவருக்கும் SHARE!

News October 11, 2025

நாமக்கல்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

image

நாமக்கல் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News October 11, 2025

நாமக்கல்லில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி!

image

நாமக்கல் மக்களே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! நமது மாவட்டத்தில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்பு.., இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 11, 2025

நாமக்கல்லில் ஊராட்சி செயலாளர் வேலை!

image

நாமக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும், இணையதள வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவ.9. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 11, 2025

நாமக்கல் பயணிகளின் கவனத்திற்கு!

image

நாமக்கல் வழியாக வண்டி எண் 06103/06104 திருநெல்வேலி – ஷிமோகா ரயில் நாளை(அக்.12) ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 11:55 pm, மணிக்கு நாமக்கலில் இருந்து பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி, ஷிமோகா போன்ற பகுதிகளுக்கு இயங்க உள்ளது. இதில் பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

News October 11, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!