India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் 19ஆம் தேதி காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம்: நாமக்கல் 2.00 மிமீ, புதுச்சத்திரம் 2.00 மிமீ சேந்தமங்கலம் 1.00 மிமீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 5.00 மிமீ பதிவாகியுள்ளது என நாமக்கல் மாவட்டம் நிர்வாகம் இன்று 19ஆம் தேதி காலை வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில், அதன் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே, முட்டை கொள்முதல் விலை 480 காசுகளாக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.98க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.83க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் வரும் 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் மற்றும் இதர பொருட்கள் குறித்து ஆலோசனை செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள். தைத்திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, மோகனூர் கிழக்கு ஒன்றியம், என் புதுப்பட்டி ஊராட்சியில், திமுக இளைஞரணி நடத்தும், மாபெரும் குதிரை வண்டி எல்லை பந்தயம் இன்று நடைபெற இருக்கிறது. இதனை எம்பி ராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (18/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – வேதப்பிறவி (9498167158), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – சதீஸ்குமார் (9498103997), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று ரூ 4.60 காசுகளாக இருந்தது. இன்று 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ 4.80 ஆக உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 3 நாளில் ரூ.19 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மது கடைகளிலும் பொங்கல் பண்டிகையையொட்டி வழக்கத்தைவிட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. குறிப்பாக கடந்த 13, 14ஆம் தேதிகளிலும், நேற்று முன்தினமும் மது விற்பனை அதிகரித்திருந்தது. அதன்படி 3 நாட்களில் ரூ.19 கோடிக்கு மது விற்பனையானது தெரியவந்துள்ளது.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் 20 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று ரூ 4.60 காசுகளாக இருந்தது. இன்று 20 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ 4.80 ஆக உள்ளது.

ராசிபுரம் தாலுகா முள்ளுக்குறிச்சியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பழங்குடியின நலத்துறை சார்பில் வேலைவாய்ப்புத் திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10th, +2, ITI., டிப்ளமோ (ம) பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 33 வயதுடைய பழங்குடியினர் பங்கேற்கலாம்.

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (18-01-2025) நிலவரப்படி கறிக்கோழி பண்ணை விலை (உயிருடன்) கிலோ ரூ.98-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.83-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் முட்டை விலை 460 காசுகளாக நீடித்து வருகிறது. நேற்றைய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விலையில் மாற்றம் செய்யப்படாததால், முட்டை விலை மாற்றம் இன்றி 460 காசுகளாக நீடித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.