Namakkal

News September 2, 2024

நாமக்கல்லில் காய்கறி விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்: கத்தரி ரூ.48, கத்தரிக்காய் ரூ.20, வெண்டை ரூ.24, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.45, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.24, பாகல் ரூ.38. இதனிடையே நேற்று 1ம் தேதி 1 கிலோ கேரட் ரூ.98க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 2ம் தேதி ரூ.2 குறைந்து, 1 கிலோ கேரட் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News September 2, 2024

நாமக்கல்: வனத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது

image

கொல்லிமலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அங்கு சென்ற போலீசார், வனத்தை ஒட்டிய பகுதியில் பதுங்கியிருந்த குப்பன் (50) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, காய்ச்சிய சாராயத்தை விற்பனை செய்ய தயாராக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 60 லிட்டர் சாராய ஊறலை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர். மேலும், குப்பனை போலீசார் கைது செய்தனர்.

News September 2, 2024

நாமக்கல்: தகாத உறவுக்காக குழந்தையை கொன்ற தாய்

image

சேந்தமங்கலம் அருகே காந்திபுரத்தைச் சேர்ந்த தம்பதியினர் முத்தையன் – சினேகா. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் இருந்துள்ளார். இதனிடையே சினேகாவுக்கும், சரத்குமார் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததால், அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்துள்ளனர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு செல்லப்பம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற சினேகா, தனது மகளை விவசாய கிணற்றில் தூக்கி வீசி கொலை செய்துள்ளார்.

News September 2, 2024

மோகனூர் சூதாடிய இருவர் கைது

image

நாமக்கல் மாவட்டம், மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன், தலைமையிலான போலீசார் மோகனூர் அடுத்த மணியங்காளிபட்டியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணியங்காளிபட்டி கருப்பனார் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த மோகனூர் புது தெருவை சேர்ந்த தேவராஜ் (வயது 50)தமிழ்வாணன் (வயது 49) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.

News September 1, 2024

நாமக்கல் முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன இதிலிருந்து தினந்தோறும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்று மாலை நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையில் மாற்றம் இல்லை என தெரிவித்தனர் இன்று நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டை விலை 4.70 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

News September 1, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

image

நாமக்கல் நகரில் உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு இன்று 11 மணியளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின் துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்றனர்.

News September 1, 2024

நாமக்கல்: பெண் போலீஸ் புகாரில் கணவர் கைது

image

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் முதல்-நிலை பெண் காவலராக பணியாற்றி வருபவர் சித்தேஸ்வரி. இவரது கணவர் சரவணகுமார். இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் சரவணகுமார் மதுபோதையில் வந்து தகாத வார்த்தைகளால் திட்டி, அடிப்பதாக சித்தேஸ்வரி, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து இன்று சேந்தமங்கலம் போலீசார் சரவணகுமாரை கைது செய்தனர்.

News September 1, 2024

நாமக்கல்லில் மத்திய இணை அமைச்சர்

image

திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் செயல்படுகிறது. நூற்றாண்டு விழா கண்ட இந்த காந்தி ஆசிரமத்தில் கதர் பவன் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News September 1, 2024

நாமக்கல்: கந்துவட்டி தற்கொலை வழக்கில் பெண் கைது

image

பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவரிடம் ரூ.30,000 கந்து வட்டிக்கு கடன் பெற்றார். கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கவிதா ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சுஜாதா கடந்த 21ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கவிதா நேற்று திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

News September 1, 2024

நாமக்கல்: லாரி மீது மினி ஆட்டோ மோதி விபத்து

image

சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி சாலையில் இன்று லாரி மீது மினி ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த திருச்சி மாயனூரை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், ஆட்டோவை ஒட்டி வந்த ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!