Namakkal

News September 3, 2024

நாமக்கல் கலெக்டர் அறிவுரை

image

நாமக்கல்லில் பள்ளி ஒருங்கிணைப்பாளர்க்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கலெக்டர் உமா பேசுகையில் தற்போதைய காலத்தில், பெரும்பாலான குடும்பங்களில் ஒற்றை குழந்தைகளை அதிக செல்லம் கொடுத்து, குழந்தைகள் கேட்பதை உடனடியாக வாங்கி கொடுத்து, பணத்தின் அருமையை உணராத விதமாக வளர்த்து வருகின்றனர் என்று கலந்து கொண்டவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

News September 3, 2024

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவரா நீங்கள்?

image

நாமக்கல் மாவட்டத்தில் Way2News நிருபராக மாற விருப்பமும், ஆர்வமும் உள்ளதா? உங்கள் பகுதிகளில் பகுதிகளில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை செய்திகளாக பதிவிட்டு கூடுதல் வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் உரிய ரூபாய் வழங்கப்படும். உங்கள் ஊரின் நிருபராக மாறுங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுங்கள்! இப்போதே நிருபராக பதிவு செய்யவும். தொடர்புக்கு 91603 22122

News September 3, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம்

image

நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆகும். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் நாமக்கல் ஆஞ்சநேயருக்கு காலையில் சிறப்பு அபிஷேகமான வாசனை திரவியம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து சாமிக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. நாமக்கல் சுற்றுவட்டார பகுதி சேலம், கரூர் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

News September 3, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் 616 மனு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம், ஆட்சியர் உமா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவித் தொகை, வங்கி கடன், அடிப்படை வசதி உள்ளிட்டவற்றிற்காக ஒரே நாளில் 616 பேர் மனு கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர், உரிய துறைக்கு அனுப்பி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

News September 3, 2024

நாமக்கல்லில் இன்றைய காய்கறி விலை விபரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்: தக்காளி ரூ.18, வெண்டை ரூ.20, அவரை ரூ.65, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.40, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.40, பீர்க்கன் ரூ.36. இதனிடையே நேற்று 2ம் தேதி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 3ம் தேதி ஒரு கிலோவிற்கு ரூ.5 விலை குறைந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News September 3, 2024

நாமக்கல்: குழந்தையை கொன்ற 2 பெண்கள் கைது

image

சேந்தமங்கலம் அருகே காந்திபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் முத்தையா – சினேகா. இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை இருந்தது. இதனிடையே சினேகா மற்றொரு ஆணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று தகாத உறவுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தையை அவர் கிணற்றில் வீசி கொலை செய்துள்ளார். இதையடுத்து சினேகாவையும், இதற்கு உறுதுணையாக இருந்த அவரது உறவினர் கோகிலாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

News September 2, 2024

பனை விதை நட ஆட்சியர் அழைப்பு

image

காவிரிக்கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் நெடும் பணியில் பங்கேற்க தன்னார்வலர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் உமா அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி இதில், பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர்கள், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், சமூக வலைதள பிரபலங்கள் udhavi.app/panai என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறும் ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News September 2, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 616 மனுகள் 

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 616 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

News September 2, 2024

நாமக்கல் அருகே பள்ளியில் பரபரப்பு

image

நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் அமைந்துள்ளது. அங்கு காலை உணவு திட்ட சமையலறை கூடத்தில் அதே பள்ளியில் ஆசிரியர்கள் அறை முன்பும் உள்ள சுவற்றில் சமூக விரோதிகள் கெட்ட வார்த்தையும் பாலியல் உணர்வை தூண்டும் வகையிலான படங்களை வரைந்தும் காலை உணவு கூட அறையின் பூட்டில் மலத்தை அப்பியும் உள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக நிர்வாகி செந்தில் பாரதி கோரிக்கை விடுத்தார்.

News September 2, 2024

நாமக்கல்: 8 இடங்களில் கால்நடை ஆம்புலன்ஸ்

image

நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டகலூர்கேட், களங்காணி, ஆர்.புதுப்பட்டி, சேந்தமங்கலம், அனியாபுரம், மல்லசமுத்திரம் மாணிக்கம்பாளையம், பல்லக்காபாளையம் போன்ற பகுதிகளில், முதல் கட்டமாக 8 கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. இந்த சேவை முற்றிலும் இலவசம் என்று கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் மண்டல மேலாளர் அறிவுக்கரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!