Namakkal

News July 26, 2024

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள்

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு திட்டம் 2024-25 கீழ் தேக்கு, மகாகணி, சவுக்கு, புச்கண், இழுப்பை, நீர்மத்தி, ஈட்டி, நாவல், கொன்றை, மகிழம், வேம்பு, வனப் பாதுகாப்பு சரகத்தின் மூலம் மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்க உள்ளனர். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 7708276096, 6380564340, 9965043817, 6383930224 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

News July 26, 2024

விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேளாண் துறையின் கீழ் நடமாடும் மண் பரிசோதனை வாகனம், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்கிறது. இந்த வாகனம் 7ஆம் தேதி தேவனாங்குறிச்சியிலும், 14ஆம் தேதி அலவாய்ப்பட்டியிலும், 21ஆம் தேதி பேளுக்குறிச்சியிலும், 28ஆம் தேதி அகரத்திலும் முகாம் நடைபெறுகிறது. இதனை விவசாயிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 26, 2024

மத்திய அமைச்சரை சந்தித்த நாமக்கல் எம்.பி

image

மத்திய பிரதமர் அலுவலகம், பணியாளர் பொதுமக்கள் குறை தீர்வு மற்றும் ஓய்வூதியம் அணுசக்தி விண்வெளித் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்கை நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மரியாதை நிமித்தமாக இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது நாமக்கல் மாவட்ட வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

News July 26, 2024

விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேளாண் துறையின் கீழ் நடமாடும் மண் பரிசோதனை வாகனம், கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று மண் மற்றும் நீர் மாதிரிகளை பெற்று ஆய்வு செய்கிறது. இந்த வாகனம் 7ஆம் தேதி தேவனாங்குறிச்சியிலும், 14ஆம் தேதி அலவாய்ப்பட்டியிலும், 21ஆம் தேதி பேளுக்குறிச்சியிலும், 28ஆம் தேதி அகரத்திலும் முகாம் நடைபெறுகிறது. இதனை விவசாயிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 26, 2024

நாமக்கலில் மீண்டும் படகு சவாரி

image

நாமக்கலின் மையத்தில் அமைந்துள்ள கமலாலய குளக்கரையில் கடந்த அதிமுக ஆட்சியில் குளத்தை சுத்தம் செய்து படகு சவாரி நடத்தினர். பின்னர் திமுக ஆட்சியில் அதை கண்டு கொள்ளாமல் அப்படியே கிடந்தது. இந்நிலையில் மீண்டும் பொது மக்களின் கோரிக்கையை அடுத்து கமலாய குளக்கரையில் நேற்று மாலை அதிநவீன படகுகள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேலும் இனி தினந்தோறும் மாலை நேரத்தில் படகு சவாரி செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

News July 26, 2024

நாமக்கலில் பருத்தி 25 லட்சத்திற்கு வர்த்தகம்

image

நாமக்கல் அடுத்த மல்லசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை தொடக்க சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பி.டி. ரகம் 1குவிண்டால் ரூ.6,699 முதல் ரூ.7,479 வரையிலும், சுரபி ரகம் 1குவிண்டால் ரூ.8,690 முதல் ரூ.8,900 வரையிலும், கொட்டு ரகம் 1குவிண்டால் ரூ.3,899 முதல் ரூ.4,909 வரையிலும் மொத்தம் 25லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.இதன் விலை தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 25, 2024

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி

image

கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

News July 25, 2024

அக்னி வீர் ஆட்சேர்ப்பு முகாம் ஆட்சியர் தகவல்

image

இந்திய இராணுவத்தின் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், அக்னிவீர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிகல், அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் நேரு ஸ்டேடியம், இராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் 01.08.2024 முதல் 05.08.2024 வரை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா தெரிவித்துள்ளார்.

News July 25, 2024

திமுக சார்பில்  ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

நாமக்கல்
திமுக மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஷ்குமார்
இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்த, பாஜக அரசைக் கண்டித்து, நாமக்கல்லில் வரும் 27.07.2024ம் தேதி, சனிக்கிழமை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்புவிடுத்து உள்ளார்.

News July 25, 2024

நிலசரிவில் சிக்கிய நபரை தேடும் பணி தீவிரம்

image

நாமக்கலை சேர்ந்த சரவணன் கர்நாடக நிலசரிவில் சிக்கி காணாமல் போய் உள்ளார். அவரை 10 நாட்களாக கர்நாடக வெள்ள மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். அதை அடுத்து சரவணனை உடனடியாக , மீட்டு தரக்கோரி அவரது மனைவி தமிழக அரசுக்கு கோரிக்கை அளித்துள்ளார். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!