India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் நகர் மோகனூர் சாலை பகுதி பிவிஆர் தெருவில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற பொறியாளர் சிங்காரவேலு. இவர் வயது மூப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நேற்று மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் எலைட் அரிமா சங்க உதவியுடன், அவரது இரு கண்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்காரவேலுவின் சேவையை நாமக்கல் நகர மக்கள் பாராட்டி வருகின்றனர்.
நாமக்கல்லில் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி விலங்கியல் துறை உதவி பேராசிரியர் திருமணமான பிரதாப் (44). இங்கு 22 வயது பெண், முதுகலை பட்டம் பெற்று வீட்டில் உள்ளார். இளங்கலை படித்தபோது பிரதாப்புடன், மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி, பிரதாப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று பிரதாப்பை கைது செய்தார்.
நாமக்கல்லில் முதுநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ராமு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் விட வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ஒரு சில பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம் நடைபெற்று வரும் காரணத்தால் பள்ளி பள்ளிக்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் வருகை புரிகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார் .
நாமக்கல்லில் முதுநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் ராமு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசு பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை 9 நாட்கள் விட வேண்டும் என அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதில் ஒரு சில பள்ளிகளில் நாட்டு நலப்பணித் திட்டம் நடைபெற்று வரும் காரணத்தால் பள்ளி பள்ளிக்கு மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களும் வருகை புரிகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார் .
நாமக்கல் மாவட்டம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை உதவிபேராசிரியரான பிரதாப் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டார். இவர் அதே கல்லூரியை சேர்ந்த முன்னாள் மாணவியை தன் பாலியல் இச்சைக்கு விருந்தாக்கி ஏமாற்றியதாக, மாணவி காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் உதவிபேராசிரியர் பிரதாப்பை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் உழவர் சந்தைக்கு கடந்த வாரத்தில் 163 விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த 25135 கிலோ காய், கனி, பூ உள்ளிட்டவர்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ 9,84,450 ஆகும். மேலும் நாமக்கல் உழவர் சந்தைக்கு கடந்த வாரத்தில் 5027 நுகர்வோர் வருகை புரிந்துள்ளனர் அவர்கள் தங்களுக்கு தேவையான காய், கனி, பூ உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் கீரம்பூா், புலவா்பாளையம் அருகே சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக நேற்று பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று, சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும், அவா்களிடமிருந்து ரூ.74 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு மாநகராட்சியின் எல்லையில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு சுங்கச்சாவடி இருக்கக் கூடாது என்ற விதிமுறையை கொண்டு கீரம்பூர் சுங்குச்சாவடியை அகற்ற வேண்டும் என்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளார்.
திருச்செங்கோடு அருகே குட்டிமேய்க்கன்பட்டி ஜானகி என்பவர் தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு பாட்டிலில் இருந்த பெட்ரோலை தண்ணீர் என நினைத்து அவருடைய 2வயது குழந்தை அனுஜா குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் குழந்தை மயங்கி விழுந்ததை அடுத்து மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்.
நாமக்கல் மாநகராட்சியில் உள்ள கோழி பண்ணைகளில் இருந்து தினமும் கொள்முதல் செய்யப்படும் முட்டைகள், பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு ஒரு முட்டையின் விலை ரூ 5.05 ஆக நிர்ணயம் செய்துள்ளது. மேலும், கறிக்கோழி (உயிருடன்) ஒரு கிலோ ரூ.104 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.