India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (03-10-2024) நிலவரப்படி கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ. 104-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107-க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும் முட்டை விலையை பொறுத்தவரையில் ஒரு முட்டை 505 காசுகளாக நீடித்து வருகிறது. புரட்டாசி எதிரொலியாக விலைகளில் எதுவும் மாற்றம் இன்றி நீடித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்துக்கு இம்மாதம் வருகை தருகிறார். இந்நிலையில், விழா மேடை அமைக்கும் இடத்தை எம்.பி கே.ஆர்.என் ராஜேஸ்குமார், கலெக்டர் உமா ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இவ்விழாவில் பல்வேறு புதிய திட்டப் பணிகளை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும். ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மூத்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் ஏழுமலை என்பவருக்கு, ஒரு நாள் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவர் 3 கோப்புகளில் கையொப்பமிட்டார். மேலும், தூய்மை பணியாளர்கள் அனைவரும் போதைப்பொருட்களுக்கு அடிமையாக மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. புரட்டாசி அம்மாவாசை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்ககவசம் சாற்றப்பட்டுதுளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
பரமத்தி அருகே உள்ள நல்லியம்பளையம் பகுதியில் சிலர் போதை மாத்திரை பயன்படுத்துவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை செய்ததில் நித்திஷ், கெளதம், பசுபதி, ஒரு சிறுவன் ஆகியோர் போதை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பரமத்தி வேலூர் பகுதிகளில் போதை மாத்திரை பயன்படுத்திவது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்களின் விலை நிலவரம் தக்காளி 40 ரூபாய் வெங்காயம் 50 ரூபாய் சின்ன வெங்காயம் 80 ரூபாய் கத்திரிக்காய் 40 ரூபாய் வாழைக்காய் ஒன்று 10 ரூபாய் வெண்டைக்காய் 20 தேங்காய் 40 ரூபாய் எலுமிச்சம் பழம் 100 ரூபாய் பூண்டு 300 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை அமாவாசை என்பதால் ஏராளமான பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி சென்றனர்.
நாமகிரிப்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர். நாமகிரிப்பேட்டை ஆர் புதுப்பாளையம். வெள்ளகல்பட்டி ஆகிய பகுதியில் ஆய்வு செய்து புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைக்கு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்து அந்த கடைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளில் நாளை (அக்.2) காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், கிராம பஞ். நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், துாய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, இதர பொருட்கள் குதித்தும் விவாதிக்கப்படுகிறது” என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும். மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பிகாம் பாடப்பிரிவு மாணவி ஶ்ரீநிதி, 19-வயதுக்குட்பட்டோர் மகளிர் டி-20 கிரிக்கெட் அணியில் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 1 முதல் 8 வரை ஹரியானா மாநிலம் – குருகிராம் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
Sorry, no posts matched your criteria.