India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலில், முத்தரையர் சமுதாயத்தின் பாரம்பரிய உரிமைகளை மறுக்கப்படுவதாகவும், அதில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர் என்றும் கூறி முத்தரையர் சமூக மக்கள் கொடிகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழர் தேசம் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நில மோசடி வழக்கில் கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் நிலமோசடி வழக்கு சம்பந்தமாக தற்போது நாமக்கல், திண்டுக்கல் ஆகிய இடங்களில் சிபிசிஐடியினர் சோதனை நடத்தி வருகின்றனர்
நாமக்கல்லில் நேற்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா முன்னிலையில் நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 3வது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ரூ 89.29 கோடியில் நவீன பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள ஆணையிடப்பட்டது. இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் வண்டல் மண்ணை விவசாய மண்பாண்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தாமல், வியாபார நோக்கில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், அபராதத்துடன் ரத்து செய்யப்படும் என நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் வாரந்தோறும் ஞாயிறு நாட்டுக்கோழி சந்தை கூடுகிறது. இங்கு பரமத்தி,கீரம்பூர். பாலப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நாட்டுக்கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.இந்த வாரம் கோழிகள் வரத்து அதிரித்ததால் அதன் விலை சரிந்தது. கடந்த வாரம் 1 கிலோ நாட்டுக்கோழி ரூ.500
விற்ற நிலையில் நேற்று விலை குறைந்து ரூ.400க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள், ஏமாற்றத்துடன் கோழிகளை திரும்ப கொண்டு சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோட்டில் உள்ள தனியார் கூட்டலில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 3-வது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா தலைமையில் நடந்தது. இதில் கே.ஆர் என் ராஜேஸ் குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நாமக்கல் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சென்ன கிருஷ்ணன் ஆவடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனுடன் கும்பகோணம் நகராட்சியில் பணியாற்றி வந்த மகேஸ்வரி நாமக்கல் மாநகராட்சிக்கு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மகேஸ்வரி விரைவில் நாமக்கல் மாநகராட்சி ஆணையாளராக பதவி ஏற்க உள்ளார் என கூறப்படுகிறது. இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், நாமக்கல் சொந்தங்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
தமிழ்நாடு சிறப்பு பொது விநியோகத்திட்டம்மூலம் 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. ஜூன்.2024 மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத அட்டை தாரர்கள் ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஏனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 539964 அட்டை தாரர்களில் ஜூலையில் பொருட்கள் பெற இயலாதவர்கள் இந்த மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நாமக்கல்லில் புதியதாக சித்த மருத்துவமனை 60 படுக்கை வசதிகளுடன் செயல்படும்’ என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து நாமக்கல் கலெக்டர் உமா தலைமையில், எம்.பி., ராஜேஸ்குமார், புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சித்த மருத்துவமனை பணிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.