India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எருமைப்பட்டி அருகே குருவனம் என்பவரது தோட்டத்தில் அருகே சுப்பிரமணி என்பவர் செல்லும்போது, அப்பகுதியில் இருந்து நாட்டுத் துப்பாக்கி வெடித்தது. இதில் சுப்பிரமணி காயமடைந்தார். இது குறித்து எருமைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கொல்லிமலை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் துப்பாக்கியை உரிமம் இல்லாமல் வைத்திருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்தனர்.
நாமக்கல் இமயம் சிறப்பு மருத்துவமனை நடத்தும் அலர்ஜி, ஆஸ்துமா, மற்றும் சர்க்கரை நோய்க்கான இலவசம் மருத்துவ முகாம் 19/10/2024 சனிக்கிழமை நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல் பிள்ளையார் கோவில் அருகில் திருச்செங்கோடு ரோட்டில் அமைந்துள்ள இமயம் சிறப்பு மருத்துவமனையில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – லட்சுமணதாஸ் (9443286911), இராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – குமார் (9080709435) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
புரட்டாசி மாதம் இன்றுடன் நிறைவடைந்தது. நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. புரட்டாசி முடிந்துள்ள நிலையில் முட்டையின் நுகர்வு சற்று அதிகரிக்க கூடும். இருப்பினும் முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ரூ 5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாநகராட்சி பகுதிக்கு வருகின்ற 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிய உள்ளார். முதல் நிகழ்ச்சியாக பரமத்தி சாலையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதலைப்பட்டி புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டப மைதானத்தில் முதலமைச்சர் சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வது தொடர்பான பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலூர், குமாரபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.10.2024க்குள் அளிக்கப்பட வேண்டும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தற்பொழுது பருவமழை பெய்து வருவதால் கால்நடை வளர்ப்போர் மின் கம்பங்களிலோ, மின் கம்பங்களுக்கு அருகாமையிலோ கால்நடைகளை கட்ட கூடாது, கால்நடைகள் கட்டும் இடங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கால்நடை அவசர ஊர்தியின் சேவையை பெற 1962 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை ரோந்து பணிக்காக எஸ்பி அவர்கள் அறிவிப்பார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம். நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), இராசிபுரம் – கோமலவள்ளி( 8610270472), திருச்செங்கோடு -தவமணி (9443736199), வேலூர் – செல்வராஜ் (9498153088) அவர்கள் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் பிற துறையினர் அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது மற்றும் மிரட்டல் மற்றும் அச்சுறுத்துவது கண்டறியப்பட்டால் உடனடியாக குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.