India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தின் சாலை திருப்பத்தில் பிரவுன்ஸ் பீயின்ங் என்ற டீக்கடை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கடையில் உள்ளே இருந்து பயங்கர வெடிச்சத்தத்தோடு பொருட்கள் சட்டரை உடைத்துக்கொண்டு சாலையில் பறந்து வந்து விழுந்தன. எப்போதும் இக்கடையின் அருகில் பேருந்திற்காக பயணிகள் நிறைய பேர் காத்திருப்பர், இன்று யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மாசிக்குண்டம் திருவிழா மாசி 16 பூச்சாட்டுதலுடன் நடைபெற உள்ளது மாசி 27 இல் நடைபெறும் மகா குண்டம் இறங்கும் விழாவில் திருமணம் ஆகாதவர்கள் திருமணம் நடைபெற வேண்டி , குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் குழந்தை வரம் வேண்டியும், நோய்நொடிகள் தீரவும் , கடன் தீரவும் நேர்த்தி கடன் செலுத்துவதாக வேண்டி குண்டம் இறங்கினால் அனைத்தும் நிறைவேறும் எனவே தெரியாத மக்களுக்கு இந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் மக்களே !

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று முதல் 3 நாட்களுக்கும், 19-ஆம் தேதியும் மணிக்கு 10 கிமீ வேகத்தில் காற்று வீசும்.அதே போல் 18-ஆம் தேதி மணிக்கு 12கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 60.8 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி பகுதியில் உள்ள KSR கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் பார்த்திபன் புதுதில்லியில் உள்ள கேடி ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 4வது வாகோ இந்தியா கிக் குத்துச்சண்டை ஓபன் சர்வதேச சாம்பியன் ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லூரி தாளாளர் ஆர்.சீனிவாசன் தனது பாராட்டுதலை தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (14/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – ஆனந்த குமார் (9498106533), திருச்செங்கோடு – நந்தகுமார் (9498170006), வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 14ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. குளிர் பனி வெயில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆகவே நீடிக்கிறது.

தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை நாமக்கல் மாவட்ட நூலக ஆணைக்குழு நாமக்கல் மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் புத்தகம் பேசுகிறது மக்கள் சிந்தனை அரங்கம் வரும் 27ந் வியாழக்கிழமை காலை நாமக்கல் மோகனூர் சாலைநாமக்கல் மாவட்ட போட்டித்தேர்வு நூலக பயிற்சி மையம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அருகில் நடைபெற உள்ளது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நேற்று திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவல் குழுவினர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. அதில் உள்ள காணிக்கைகள் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் எண்ணப்பட்டன. அந்த உண்டியல்களில் ரூ.58 லட்சத்து 26 ஆயிரத்து 592 ரொக்கம், 43 கிராம் தங்கம், 222 கிராம் வெள்ளி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 73 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் <

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 13-ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. பனி குளிர் வெய்யில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 ஆகவே நீடிக்கிறது.
Sorry, no posts matched your criteria.