Namakkal

News March 12, 2025

மழையிலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு, மாசி மாத புதன்க்கிழமையை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி தந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News March 12, 2025

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்களும் மற்றும் அடையாள அட்டையுடன் நேரில் அணுகலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

News March 11, 2025

மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறும் இடங்கள் 

image

நாமக்கல் மாவட்டத்தில், மக்களுடன் முதல்வர் திட்ட மூன்றாம் கட்ட முகாம் நாளை 12ஆம் தேதி, பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

News March 11, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ3.80 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. தீவன விலை உயர்வு, கோடை காலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு சற்று குறைந்தது. இதன் காரணமாக முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ3.80 ஆகவே நீடித்தது.

News March 11, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார்  விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (11/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – சங்கரபாண்டியன் (9655230300), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040) ,வேலூர் – இந்திராணி (9498169033) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 11, 2025

நாமக்கல்லில் நாளை முதல் சிறப்பு ரயில்

image

நாமக்கலில் இருந்து நாளை முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில் காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து பயன்படுத்தலாம்.

News March 11, 2025

நாமக்கல்: PM Internship திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

image

நாமக்கல்: இளைஞர்களுக்கு வேலை திறன்களை வளர்த்துகொள்ள PM Internship Scheme திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் முன்னணி நிறுவனங்களில் 12 மாத தொழிற்பயிற்சி, மாதம் ரூ.5,000 உதவித்தொகை வழங்கப்படும். இதில் பள்ளி படிப்பை முடித்தவர்கள் முதல் டிகிரி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மார்ச் 12-ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க இங்கே<> கிளிக் <<>>செய்யவும். இதை ஷேர் செய்யவும்

News March 11, 2025

நாமக்கல்லில் தந்தையை கொலை செய்த மகன்

image

நாமக்கல், மோகனூர் அடுத்த அரூர் நத்தமேடு பகுதியைச் சேர்ந்தவர் காராள கவுண்டர் (85). இவரது மகன் முருகேசன் (50) நேற்று தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தூங்கிக் கொண்டிருந்த தனது தந்தை காராள கவுண்டரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் முருகேசனை கைது செய்தனர்.

News March 10, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (10/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890) ,வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 10, 2025

நாமக்கல்லுக்கு பெருமை சேர்த்த பாண்டு!

image

குமாரபாளையத்தில் பிறந்து நாமக்கல் மாவட்டத்திற்கே பெருமை சேர்த்தவர் நகைச்சுவை நடிகர் பாண்டு. 1981ஆம் ஆண்டில் ’கரையெல்லாம் செண்பகப்பூ’ என்ற திரைப்படம் மூலாம் அறிமுகமாகி, நூற்றுக்கணக்கான படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் சிறப்பான ஓவியராகவும் இருந்தவர். அதிமுக கொடி, சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2021ஆம் ஆண்டு தனது 74வது வயதில் பாண்டு உயிரிழந்தார்.

error: Content is protected !!