India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டை அடுத்த மெட்டலா அருகே நேற்று பஸ் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அங்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மற்றும் நாமக்கல் ஆட்சித் தலைவர் ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – சிவக்குமார் (9498176695), வேலூர் – இராமகிருஷ்ணன் (9498168464) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே இன்று தனியார் பேருந்தும், லாரியம் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநர் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, “ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதை தமிழக அரசு முறைப்படுத்த வேண்டும். மேலும், காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்திலுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் (01.11.24) உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டம், நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ரவிச்சந்திரன் (9498169276) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 21ஆம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.45 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இந்த நிலையில் இன்று 5 காசுகள் உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.45 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் மட்டும் சட்டையில் கருப்பு பேட்ச் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தஞ்சாவூரில் பெண் ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் சட்டை மற்றும் தங்களது உடையில் கருப்பு பேட்ச் அணிந்து பணி செய்தனர்.
கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 22ஆம் தேதி வெள்ளிக் கிழமை, நாமக்கல் கோட்டத்திற்கு நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கிலும், திருச்செங்கோடு கோட்டத்திற்கு திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்குகளிலும் நடைபெற உள்ளது. முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில் விவசாயிகள்,விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை கள பணியாளர்களில், நிரந்தர பணியாளர்கள் 86 பேர், தற்காலிக பணியாளர்கள் 100 பேர் தங்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறி நகராட்சி பணியை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முறையில் சம்பளம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
Sorry, no posts matched your criteria.