India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்செங்கோடு அருகே சிறுமொளசியில் வசித்து வருபவர் முனுசாமி. இவருடைய இளைய மகள் செல்வி (17). கடந்த 2 ஆண்டுகளாக செல்வி வயிற்று வலியால் அவதிப்பட்டுவந்தார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் குணமடையவில்லை. இதனால் செல்வி மனவேதனையில் இருந்து வந்த நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 1,907 சைபர் குற்ற வழக்குகள் (இணைய வழி மோசடி) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட எஸ்பி ராஜேஸ் கண்ணன் தெரிவித்தாா். பொதுமக்கள் பணத்தை ஆன்லைன் மூலம் இழந்தால் காவல் நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக 1930 எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். கைப்பேசி திருட்டுகள் நடைபெற்றால் இணையத்தில் கைப்பேசி எண்ணை கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (21/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200) ,வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கலில் இன்று 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. முட்டையின் நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.15 ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில், குரூப் 4 தேர்விற்கு பயிற்சி வகுப்பு மார்ச் 25ம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கவுள்ளது. இதில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் 04286-222260 எண் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!

நாமக்கல்லில் உள்ள பல்வேறு மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர் . மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர். நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில் உள்ள மீன் சப்ளை செய்யும் கடைகள் உட்பட மொத்தம் 11 மீன்கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவுசெய்யப்பட்டு ரூ.70 ஆக அதிகரித்துள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் நேற்று, அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி கிலோ ரூ.104 ஆக குறைந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் மினி பஸ் இயக்குவதற்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் புதிய மினிப் பேருந்துக்கான SCPA விண்ணப்பப் படிவத்தினை Parivahan மூலமாக விண்ணப்பித்து Onlineஇல் கட்டணம் ரூ.1600 செலுத்தி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் ஆவணங்களுடன் வட்டார போக்குவரத்து அதிகாரியிடம் மார்ச் 23ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம்.

நாமக்கல் – மோகனூர் சாலையில் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற சைபர் குற்றம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது ஆன்லைன் டிரேடிங், திட்டங்களில் முதலீடு, டாஸ்க்கை எதிர்கொள்ளுதல் போன்ற வழிகளில் பணத்தை இழந்தால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால், உடனடியாக இழந்த பணத்தை நிறுத்தி வைக்க முடியும் என்று தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (20/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – தவமணி (9443736199) ,வேலூர் – ராதா (9498174333) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.