India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சவுரிபாளையம் மாதா கோயில் கிழக்குத் தெருவை சேர்ந்த சுண்டக்கா (எ)ராஜி என்பவர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக சிறுமியின் தாய் செல்லம்மாள் கொடுத்த புகாரியின் அடிப்படையில் சுண்டக்கா (எ) ராஜி மீது போக்சோ வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆவணி மாத புதன்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
பாஜக சார்பில் செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று, அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே உறுப்பினர் சேர்க்கைக்கான நாமக்கல் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நாளை 12ம் தேதி நாமக்கல்லில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளையும் செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார்.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்துடன் கூடிய கலைஞர் அரங்கம், கழக பவள விழா நினைவு 60 அடி கொடி கம்பத்தில் கொடியேற்று விழா, மற்றும் உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நாளை (12ம் தேதி) நடைபெறுகிறது. அலுவலகத்துடன் கூடிய கலைஞர் அரங்கத்தை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைக்க உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பரமக்குடிக்கு சென்ற கார் கமுதக்குடி சாலையில் நடுவே உள்ள தடுப்பில் மோதியது. இதில் காரில் உள்ளே இருந்த 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும், இவ்விபத்தில் படையப்பா என்பவரின் இரண்டு கால்களும் உடைந்தன. பின்னர் பலத்த காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது” 2024-25 ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.233.234 கூடுதல் கட்டிடம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல், தொலைபேசி:04286-299460 தொடர்பு கொள்ளலாம்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வியாழன் கிழமை முதல் 19ஆம் தேதி வரை காலை 10 மணிக்கு தொழில் முனைவோர்களுக்கான தேனீ வளர்ப்பு என்ற தலைப்பில் 5 நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளபவர்கள் 04286 266345, 710588683, 9597746373, 9943008802 என்ற எண்ணிகளில் தொடர்பு கொண்டு பயன்பெற வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் வரை மாலை 4 மணி வரை வேளாண் பயிர்களில் நீர் பாசன மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 04286 266345, 9597746373 , 2010580683 என்ற தொலைபேசி எண்களை அணுகி பயன்பெற வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம)மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக அம்பேத்கார் அகாடமி(ம) சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர்(ம) பழங்குடியினர் மாணக்கர்களுக்கு ஒரு வருட காலம் UPSC தேர்வுக்கான முதல் நிலை முதன்மை நிலை பயிற்சியினை வழங்கவுள்ளது. இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது . இதில் மாவட்ட இரவு ரோந்து அதிகாரி ஆகாஷ்ஜோஷி உதவி காவல் கண்காணிப்பாளர்- 9711043610. உட்கோட்டம் நாமக்கல்: வெங்கடாசலம், காவல் ஆய்வாளர்- 9445492164, இராசிபுரம்: சுரேஷ் காவல் உதவி ஆய்வாளர்- 9788015452, திருச்செங்கோடு: தவமணி, காவல் ஆய்வாளர்- 9443736199 வேலூர்: ரவிசந்திரன், காவல் உதவி ஆய்வாளர்- 9498169276.
Sorry, no posts matched your criteria.