India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1.நாமகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை
2.சென்றாயபெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு பூஜை
3.போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் கைது
4.தமிழ் புலிகள் கட்சியின் 17ம் ஆண்டு துவக்க நாள் விழா
5.நாமக்கல்லில் எரிவாயு நுகர்வோர் கூட்டம் நாலை நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – யுவராஜ் (9498177803), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன மேலாளர்கள் எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலத்தில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை 27ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. கூட்டத்தில் பங்கேற்று பயன்பெற ஆட்சியர் உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (26-11-2024) நிலவரப்படி, கறிக்கோழி (உயிருடன்) விலை கிலோ ரூ.73-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.97-க்கும் விற்பனையாகி வருகின்றது. முட்டை விலையைப் பொறுத்தவரையில், பண்ணை கொள்முதல் விலை நேற்று 5 காசுகள் அதிகரித்து ரூ.5.65-ஆக விற்பனையாகி வருகின்றது. கடந்த 5 நாட்களில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி விவசாயிகளும் பயன்பெறும் வகையில் ஆட்சித்தலைவர் தலைமையில் வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கு கோரிக்கைகள் குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்துக்குள் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்தி, அனைத்து வணிகா் சங்கங்கள் சாா்பில் நாமக்கல்லில் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைவீதியில் உள்ள அனைத்து நகைக் கடைகளும், ஜவுளிக் கடைகளும் மூடப்பட்டதால் அப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. கடையடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
1.நாமக்கல்லில் தொடர்ந்து முட்டை விலை உயர்ந்து ரூ 5.65க்கு விற்பனை
2.அரிசன் காலனி என்ற பெயரை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்
3.நாமக்கல் ஆட்சியரிடம் 579 மனுக்கள் வழங்கல்
4.பாலியல் வன்கொடுமைக்கு எதிரான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
5.நாமக்கல் உழவர் சந்தையில் 30 டன் காய்கறி விற்பனை
நாமக்கல் வேவைவாய்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை,பதிவு புதுப்பித்தல், திறன்மேம்பாடு பயிற்சி ,தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகியவை நடைபெற்றுவருகிறது.இதனை பயன்படுத்தி ஒருசிலர் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் பரப்புகின்றனர்.இவ்வாறு செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா எச்சரிக்கை விடுத்தார்.
தேசியமுட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 25ஆம் தேதி நடைபெற்றது இக்குழுவின் கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.65 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இதன் காரணமாக இன்று 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.65 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – வெங்கடாசலம் (9445492164), ராசிபுரம் – சுகவனம் (9498174815), திருச்செங்கோடு – மகாலட்சுமி (7708049200), வேலூர் – கங்காதரன் (6380673283) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.