India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் அருள்குமார், 22 இவர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பெங்களூரு சென்று விட்டு, ஆம்னி பஸ்சில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நேற்று முன்தினம் குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனி அருகே சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறம் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அருள்குமார், டிரைவர் ஜெயக்குமார், கிளீனர் ஆகிய மூவரும் காயமடைந்தனர். அருள்குமார் உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் மிகச்சிறந்த சமூக, வகுப்பு நல்லிணக்கத்திற்கான சிறப்பாக செயல் புரிந்தவர்களுக்கு கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண் 9150057452-ல் கொண்டும் விபரம் தெரிந்து கொள்ளுமாறு நாமக்கல் ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமலவள்ளி (8610270472), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுபவர்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இந்திய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர் குறைதீர் கூட்டம் நாளை (28.11.2024) அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை இன்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேரில் சந்தித்தார். அப்போது, துறந்தோ ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல உத்தரவு பிறப்பித்ததற்கு நன்றி தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்தும் கலந்துரையாடினார்.
நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் நடத்தும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் கட்டுநர்கள் பணியிடம் நேர்முகத்தேர்வு மூலம் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணையவழி பெறப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 97 விற்பனையாளர் பணியிடங்களுக்கு 5,828 விண்ணப்பங்களும் மற்றும் 12 கட்டுநர் பணியிடங்களுக்கு 1,004 விண்ணப்பங்களும் பெறப்பட்டது.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.73-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை அதிரடியாக கிலோவுக்கு ரூ.14 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.87 ஆக அதிகரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 565 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.97 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 32 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை ) 34 மி.மீட்டரும், நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) 5 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 82.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 64.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாநகராட்சி மூலம் பல்வேறு இடங்களில் தினமும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ந்து நாளை புதன்கிழமை காலையில் 9:30 மணிக்கு வார்டு எண்.1 மகரிஷி நகர் மற்றும் காலை 11:00 மணிக்கு வார்டு எண்.7 நல்லிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 26 ஆம் தேதி நடைபெற்றது அந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.65 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது மழை குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இதன் காரணமாக ஒரு முட்டையின் ரூ.5.65 என்ற விலையில் எந்த விதமான மாற்றம் இல்லாமல் தொடர்ந்து நீடிக்கிறது.
Sorry, no posts matched your criteria.