Namakkal

News September 15, 2024

நாமக்கல் பூ மார்க்கெட்டில் இன்றைய விலை

image

நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட் நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பூக்களை இங்கு ஏலத்திற்கு கொண்டு வருகின்றனர். வெளியூரிலிருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கி செல்கின்றனர். இன்று சம்பங்கி ரூ 160 -100க்கும், பட்டன் ரோஸ் ரூ 250-200 க்கும், பன்னீர் ரோஜா ரூ 80-50, அரளி ரூ 30, மல்லி ரூ 500-240 க்கும் விற்கப்படுகிறது.

News September 15, 2024

பலபட்டரை மாரியம்மனுக்கு தங்க கவசம்

image

நாமக்கல் அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் திருக்கோவில் உள்ளது இந்த பலபட்டரை மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. பின்னர் அருள்மிகு பலப்பட்டரை மாரியம்மன் சிறப்பு அபிஷேமும் சிறப்பு அலங்காரமாக தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று வருகின்றனர்.

News September 15, 2024

நாமக்கல்லில் காய்கறிகள் விலை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கனி பூ விலை நிலவரம்: தக்காளி ரூ.26, சின்னவெங்காயம் ரூ.38, பெரியவெங்காயம் ரூ.58, கத்தரி ரூ.54, வெண்டை ரூ.20, அவரை ரூ.72, கொத்தவரை ரூ.26, முருங்கை ரூ.40, பீர்க்கன் ரூ.48 மற்றும் வாழைக்காய் ரூ.30. இதனிடையே நேற்று 1 கிலோ முருங்கைக்காய் ரூ.35க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.5 விலை உயர்ந்து ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டது.

News September 15, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 4,994 பேர் ஆப்சென்ட்

image

டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வு நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நாமக்கலில் 35 மையங்களில் 10,742 பேர், ராசிபுரத்தில் 20 மையங்களில் 6,093 பேர், திருச்செங்கோட்டில் 18 மையங்களில் 5,442 பேர் என மொத்தம் 22,277 தேர்வர்களில், 17,283 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். 4,994 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

News September 15, 2024

நாமக்கல்லில் கறிக்கோழி விலை உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.105க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி, கறிக்கோழி விலை கிலோ ரூ.107ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், முட்டை கொள்முதல் விலை 505 காசுகளாகவும், முட்டைக்கோழி விலை கிலோ ரூ.97ஆகவும் நீடித்து வருகிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.

News September 14, 2024

ராசிபுரத்தில் கொடியேற்றிய எடப்பாடி பழனிசாமி

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதிக்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோர் சால்வை அனுவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ராசிபுரம் – சேலம் சாலையில் தனியார் மண்டபம் எதிரே அதிமுக கொடி 55 அடி உயரத்தில் ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார்.

News September 14, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 15 நூலகங்கள் கட்ட ஏற்பாடு

image

நாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மைய நூலகம் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூரில் தாலுகா நூலகம் கிராமங்களில் 69 கிளை நூலகம், 48 ஊர்ப்புற நூலகம் 31 பகுதி நேர நூலகம் என 153 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட மைய நூலகம் ரூ.37.50 லட்சம் மதிப்பீட்டில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. புதியதாக 15 இடங்களில் நூலகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நூலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 14, 2024

எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் வாபஸ்

image

நாமக்கல் சேலம் சாலையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர் சங்க நிறுவனம் உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கேஸ் டேங்கர் லாரிக்கு நிலுவைத் தொகை வழங்காத ஆயில் நிறுவனத்தை கண்டித்து கடந்த மூன்று நாட்களாக lpg டேங்க் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதை அடுத்து ஆயில் நிறுவனங்கள் நிலுவை தொகை தருவதாக ஒப்புக்கொண்டதால் எல்பிஜி டேங்க் லாரிகள் ஸ்ட்ரைகை வாபஸ் பெற்றனர்.

News September 14, 2024

மிலாடி நபி – மதுக்கடைகளை மூட உத்தரவு

image

நாமக்கல் மாவட்டத்தில் 17.09.2024 மிலாடிநபி தினத்தினை முன்னிட்டு இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடப்பட வேண்டும் என ஆட்சியர் ச.உமா அறிவித்துள்ளார். மேற்கண்ட நாளில் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

News September 14, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 73 மையங்களில் குரூப்-2 தேர்வு

image

நாமக்கல் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில் இன்று நடைபெற உள்ள குரூப்-2 முதல்நிலை போட்டித்தேர்வை 22,277 பேர் எழுதுகிறார்கள். நாமக்கல் தாலுகாவில் 10, 742 பேரும், ராசிபுரம் தாலுகாவில் 6,093 பேரும், திருச்செங்கோடு தாலுகாவில் 5,442 பேரும் என மாவட்டத்தில் 22, 277 பேர் தேர்வு எழுத உள்ளனர். மாவட்டம் முழுவதும் தேர்வு மையங்களை கண்காணிக்க 73 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

error: Content is protected !!